கொல்கத்தாவில் சட்டக் கல்லூரியில் வைத்து மாணவி ஒருவர் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டதாக வெளியாகி உள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் கொல்கத்தாவில் இதே போல ஆர்ஜிகர் மருத்துவமனையில் வைத்து பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இப்படியான நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மூன்று மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த மூன்று பேரில் மனோஜித் மிஸ்ரா என்ற மாணவர் முன்னாள் மாணவர்.
மற்ற இரண்டு மாணவர்களும் கல்லூரியில் தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள். பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரில், மனோஜித் மிஸ்ராவை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் மூன்று பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டேன். அவர் காலை பிடித்து கெஞ்சியும் பலாத்காரம் செய்தார். மேலும் அதனை வீடியோவாகவும் பதிவு செய்தார் என்று அந்த மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார். அது மட்டுமல்லாமல் 3 மணி நேரத்திற்கு மேலாக இந்த கொடுமையை அந்த மாணவி அனுபவித்துள்ளார் என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.
