அம்மா.. நான் கண்டிப்பா எக்ஸாம் எழுதுவேன்!… ஆம்புலன்ஸில் வந்து பொதுத்தேர்வு எழுதிய மாணவன்.. நெஞ்சை நெகிழவைக்கும் பின்னணி…!!!

Spread the love

சென்னை மடிப்பாக்கம் பகுதியில் உள்ள பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் 15 வயது மாணவன் சாய் கார்த்திக், இன்று ஒரு நிஜ நாயகனாக உருவெடுத்துள்ளார். வழக்கமான துடிப்புடன் பள்ளிக்குச் சென்று வந்த இவருக்கு, சமீபத்தில் வீட்டின் மாடிப் படிக்கட்டில் இருந்து நிலைதடுமாறி விழுந்ததில் முதுகெலும்பில் (Spinal Cord) பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தினால் அவரால் எழுந்து உட்காரவோ, நடக்கவோ முடியாத சூழல் ஏற்பட்டு, நீண்ட நாட்களாகப் படுத்த படுக்கையாகவே சிகிச்சை பெற்று வருகிறார்.

வாழ்க்கையின் மிக முக்கியமான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கிய வேளையில், உடல்நிலை ஒத்துழைக்காதது சாய் கார்த்திக்கையும் அவரது குடும்பத்தினரையும் கவலையில் ஆழ்த்தியது. இருப்பினும், தனது ஓராண்டு உழைப்பு வீணாகக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த அவர், படுத்த படுக்கையாகவே தேர்வு எழுத முன்வந்தார். அவரது இந்தத் தன்னம்பிக்கையைக் கருத்தில் கொண்டு, ஆம்புலன்ஸ் மூலம் தேர்வு மையத்திற்கு வந்து தேர்வு எழுதப் பள்ளிக்கல்வித் துறை சிறப்பு அனுமதி வழங்கியது.

இன்று காலை தமிழ் பாடத்திற்கான முதல் தேர்வு தொடங்கியபோது, மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ட்ரெச்சரில் கொண்டு வரப்பட்டார் சாய் கார்த்திக். முதுகெலும்பு பாதிப்பால் அவரால் பேனாவைப் பிடித்து எழுத முடியாத நிலை இருந்ததால், பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஒரு ஆசிரியை அவருக்கு உதவியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். தேர்வு அறையில் படுத்தபடியே சாய் கார்த்திக் விடைகளைச் சொல்லச் சொல்ல, அந்த ஆசிரியை அவற்றை விடைத்தாளில் எழுதினார்.

தமிழகம் முழுவதும் சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் இன்று தேர்வு எழுதி வரும் நிலையில், மரண வலியைப் பொறுத்துக்கொண்டு சாய் கார்த்திக் காட்டிய இந்த உறுதி அங்கிருந்த ஆசிரியர்களையும் சக மாணவர்களையும் கண் கலங்க வைத்தது. எத்தகைய சவால்களையும் மன உறுதியால் வெல்ல முடியும் என்பதற்குச் சான்றாகத் திகழும் இந்த மாணவனைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

8 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

8 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

8 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

8 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

8 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

8 மணத்தியாலங்கள் ago