“சொல்லவே கூசுது… ஆனா அதான் நிஜம்…” ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி… கெஜ்ரிவால் கொடுத்த செம நோஸ் கட்…!!

By Devi Ramu on பங்குனி 12, 2026

Spread the love

இந்தியாவின் நீண்டகால வெளியுறவுக் கொள்கையான அணிசேராமையைப் பிரதமர் மோடி கைவிட்டுவிட்டதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் சாடியுள்ளார். மேற்காசியப் போருக்கு முன்பே இஸ்ரேல் பிரதமருடனான நட்பைப் பாராட்டியதும், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்ததும் தான் தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு முக்கியக் காரணம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவின் தன்னாட்சியை அடகு வைத்துவிட்டு அமெரிக்காவின் விருப்பத்திற்கேற்பச் செயல்படும் மோடி, தனது பதவியை உடனடியாகத் துறக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றத்தால் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் வணிக ரீதியிலான சிலிண்டர்களுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உணவகங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதோடு, சாமானிய மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. அமெரிக்கப் பொருட்களுக்கு வரிவிலக்கு அளிப்பதும், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைத் தவிர்ப்பதும் இந்தியாவின் நலனுக்கு எதிரானது என கெஜ்ரிவால் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிர்வாகத் தோல்வியால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடிக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என்பதே அவரது கருத்தாக உள்ளது.