“இங்கு இனி முறைகேடுகளுக்கு இடமில்லை”… புகார் அளித்தால் உடனே நடவடிக்கை… அரசு வழக்கறிஞர் நியமனம் குறித்து அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு…!

By Visaka on ஆடி 7, 2026

Spread the love

மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்று தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். லஞ்சம் பெற்றுக்கொண்டு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை என்று மறுத்த அவர், நேற்று மாலை முதல்தான் முற்றிலும் நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் வழக்கறிஞர்கள் நியமன பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதாக விளக்கமளித்தார்.

மேலும், இந்த நியமன விவகாரத்தில் யாராவது பணம் வாங்கியதாகவோ அல்லது முறைகேட்டில் ஈடுபட்டதாகவோ தகுந்த ஆதாரங்களுடன் புகார் அளித்தால், அவர்கள் மீது எவ்விதப் பாரபட்சமுமின்றி உடனடியாக மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.