ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி நடைபெற்ற தெருநாய் தாக்குதல் குறித்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோத்பூரில் உள்ள ஒரு தெருவில் தம்பதியினர் இருவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கிருந்த தெருநாய்கள் கூட்டம் திடீரென அவர்களை நோக்கி ஆக்ரோஷமாகப் பாய்ந்துள்ளன.
<
प्रताप नगर शॉपिंग सेंटर के पास पैदल चल रहे महिला और पुरुष पर आवारा कुत्तों ने किया हमला, महिला ने बड़ी मुश्किल से भाग कर बचाई अपनी जान। pic.twitter.com/E71Xnyhl7k
— एक नजर (@1K_Nazar) December 21, 2025
/div>
பல்வேறு திசைகளிலிருந்து வந்த நாய்கள் அந்தத் தம்பதியைச் சூழ்ந்து கடித்ததில், இருவரும் நிலைதடுமாறி தரையில் விழுந்தனர். கீழே விழுந்த பின்னரும் நாய்கள் அவர்களை விடாமல் கடித்து இழுத்த கொடூரமான காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. இந்தத் தாக்குதலில் தம்பதியினர் பலத்த காயமடைந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து நாய்களை விரட்டி அவர்களை மீட்டுள்ளனர்.
