நாளுக்கு நாள் தெருநாய்கள் விவகாரம் என்பது பூதகரமாகியுள்ளது. குறிப்பாக குழந்தைகளை தெரு நாய்கள் தாக்குவது என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் முதல் பள்ளி செல்லும் குழந்தைகள் வரை தெரு நாய்கள் தாக்குகின்றன. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் தெரு நாய்களிடம் சிக்கிய பிஞ்சு குழந்தையை தலையைத் தவிர மற்ற அனைத்து உறுப்புகளையும் தெரு நாய்கள் தின்ற கோர சம்பவம் திண்டுக்கல் அரங்கேறியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் நுழைவாயில் அருகே பிறந்து ஒரு நாளே ஆன சிசுவின் உடலை தாய் குப்பையில் வீசி சென்றுள்ளார். அந்தப் பிஞ்சு உடலை மற்றவர்கள் மீட்பதற்குள் தெருநாய்கள் கடித்து குதறிய காட்சி பார்ப்பவர்களின் மனதை ரணமாக்குகிறது.
