அதிர்ச்சி..! “ஐயோ காப்பாத்துங்க” சிறுவனை சாலையில் தரதரவென இழுத்துச் சென்ற தெருநாய்கள்… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி வீடியோ..!!

By Soundarya on சித்திரை 11, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், தெருவில் நடந்து சென்ற சிறுவன் ஒருவனை இரண்டு தெருநாய்கள் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகிப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், தனியாகச் சென்றுகொண்டிருந்த சிறுவனை இரண்டு நாய்கள் திடீரென வழிமறித்துத் தாக்கத் தொடங்குகின்றன. தப்பிக்க முயன்ற சிறுவனை விடாமல் துரத்திச் சென்று கடித்த நாய்கள், அவனைச் சாலையிலேயே இழுத்துச் சென்ற காட்சி பார்ப்பவர்களை நிலைகுலையச் செய்துள்ளது.

நாய்களின் பிடியில் சிக்கிய சிறுவன் வலியால் அலறித் துடித்தும், நாய்கள் அவனை விடாமல் கடித்துக் குதறின. அந்தச் சமயம் அங்கிருந்த பொதுமக்கள் சிலர் ஓடி வந்து நாய்களை விரட்ட முயன்றனர். மக்களின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகே நாய்கள் சிறுவனை விட்டு விலகிச் சென்றன. பலத்த காயமடைந்த சிறுவன் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். அங்கு அவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

   

   

நகர்ப்புறங்களில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருவதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, லக்னோ போன்ற பெருநகரங்களில் நாய்கள் மக்களைத் தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பெற்றோரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தெருநாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.