தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் பரப்புரைக்கு அரசு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகக் கூறி, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். செய்தி மக்கள் தொடர்புத் துறை (DIPR) அதிகாரிகள், அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி திமுகவின் பிரசாரங்களுக்கு உதவி வருவதாகவும், இதற்கான வீடியோ மற்றும் மின்னஞ்சல் ஆதாரங்கள் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
1975-ஆம் ஆண்டு அரசு அதிகாரிகளைப் பிரசாரத்திற்குப் பயன்படுத்திய காரணத்திற்காகவே இந்திரா காந்தியின் பதவி பறிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், அதே போன்றதொரு சூழல் தற்போதும் நிலவுவதாகவும், தேர்தல் விதிமீறல் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் மீது தகுதிநீக்கம் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இப்புகார் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தை 100 சதவீதம் உறுதி செய்யும் நோக்கில், இந்திய ரயில்வே உணவு…
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொண்பரப்பி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரிடம்…
தமிழக அரசியலில் இன்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிரடித் திருப்புமுனை நிகழ்ந்துள்ளது. ஒருகாலத்தில் தமிழகத்தின் அசுர பலம் வாய்ந்த…
வங்கித் துறையில் பணிபுரிய ஆர்வமுள்ள நம்ம ஊர் இளைஞர்களுக்கு ஒரு புதிய வேலைவாய்ப்புச் செய்தியை இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான…
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில்,…
நாடு முழுவதும் கோடை வெயில் மற்றும் வெப்ப அலை தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், சுட்டெரிக்கும் சூரியனின் தாக்கத்திலிருந்து தப்பிக்க…