நீட் தேர்வு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு (EWS) ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களைக் கண்டு ஒன்றிய பாஜக அரசை விடவும் தவெக அரசுதான் அதிகம் மிரளுகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையாகச் சாடியுள்ளார். தந்தை பெரியாரைக் கொள்கைத் தலைவராகக் உரிமை கோரும் த.வெ.க. அரசு, பெரியார் திடலிலேயே காவல்துறையைக் குவித்திருப்பதற்கும், திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பரப்புரைக்குக் கடைசி நிமிடத்தில் அனுமதி மறுத்ததற்கும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அறவழியில் இயங்கும் தாய்க்கழகத்தின் பயணத்தைத் தடை செய்வதன் மூலம் “சிவப்பும் மஞ்சளும் சேர்ந்தால் கிடைப்பது காவி” என்பது உறுதியாகியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அடக்குமுறை அரசியலைக் கைவிட்டு ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் பரப்புரைக்கு உடனடியாக உரிய அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதே விவகாரத்தில் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி பூங்குன்றன் கண்டனம் தெரிவித்துப் பேசுகையில், பேரணிக்குத் தடை விதிக்கப்பட்டதற்கான காரணத்தைக் காவல்துறை தெரிவிக்கவில்லை என்றும், இதனைச் சட்டரீதியாக எதிர்கொள்வதோடு தடையை மீறி மிகப்பெரிய அளவில் பேரணியை நடத்துவோம் என்றும் எச்சரித்துள்ளார். இதனிடையே, விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறிய த.வெ.க. அரசைக் கண்டித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுகவில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக மாற்றங்களால் சில சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர்கள்…
எதிர்காலப் பிரதமர் விவகாரம் தொடர்பாகத் தவெக மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடையே எழுந்துள்ள கருத்து வேறுபாடுகள் அரசியல் களத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளன.…
தவெக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனின் சமீபத்திய பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து, மதிமுக பொருளாளர் மு. செந்திலதிபன் காரசாரமான கண்டன அறிக்கை…
மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி ஆதாரங்களைப் பெற்று, மகளிருக்கான உரிமைத் தொகையை முதல்வர் விஜய் உயர்த்தி வழங்குவார் என…
"அதிமுக, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து மூன்று வாரங்களுக்கு மேலாகிவிட்டது" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச்…
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சின்ன புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி முன்னாள் மாணவரான சிவபாலன் (29), தனது…