ஆகஸ்ட் 3-ல் பெரிய சம்பவம் இருக்கு…. தவெக அரசுக்கு எதிராக திமுக எடுத்த திடீர் முடிவு…. அறிவாலயத்தில் ஸ்டாலின் போட்ட சீக்ரெட் பிளான்…!

By Nanthini on ஆடி 31, 2026

Spread the love

நீட் தேர்வு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு (EWS) ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களைக் கண்டு ஒன்றிய பாஜக அரசை விடவும் தவெக அரசுதான் அதிகம் மிரளுகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையாகச் சாடியுள்ளார். தந்தை பெரியாரைக் கொள்கைத் தலைவராகக் உரிமை கோரும் த.வெ.க. அரசு, பெரியார் திடலிலேயே காவல்துறையைக் குவித்திருப்பதற்கும், திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பரப்புரைக்குக் கடைசி நிமிடத்தில் அனுமதி மறுத்ததற்கும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அறவழியில் இயங்கும் தாய்க்கழகத்தின் பயணத்தைத் தடை செய்வதன் மூலம் “சிவப்பும் மஞ்சளும் சேர்ந்தால் கிடைப்பது காவி” என்பது உறுதியாகியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அடக்குமுறை அரசியலைக் கைவிட்டு ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் பரப்புரைக்கு உடனடியாக உரிய அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதே விவகாரத்தில் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி பூங்குன்றன் கண்டனம் தெரிவித்துப் பேசுகையில், பேரணிக்குத் தடை விதிக்கப்பட்டதற்கான காரணத்தைக் காவல்துறை தெரிவிக்கவில்லை என்றும், இதனைச் சட்டரீதியாக எதிர்கொள்வதோடு தடையை மீறி மிகப்பெரிய அளவில் பேரணியை நடத்துவோம் என்றும் எச்சரித்துள்ளார். இதனிடையே, விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறிய த.வெ.க. அரசைக் கண்டித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.