கர்நாடகா போனா காவிரியை கையோடு கொண்டு வர நினைச்சுட்டாரோ?…. முதலமைச்சர் விஜய்யை ஓங்கி அடித்த ஸ்டாலின்.. பரபரக்கும் அரசியல் களம்….!

Spread the love

காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்சினையில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறக்காமல் கர்நாடக அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் குறுவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டு, விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இத்தகைய சூழலில், காவிரிக்கு குறுக்கே மேகதாது அண கட்ட கர்நாடகா தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், இப்பிரச்சினை குறித்துப் பேச கர்நாடகா செல்ல முயன்ற தமிழக முதல்வர் விஜயின் முடிவுக்குத் தமிழகத்தின் அனைத்துக் அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

தமிழ்நாட்டின் அனைத்துக் தரப்பு எச்சரிக்கைகளையும் மீறி, கர்நாடக முதலமைச்சரைச் சந்தித்துப் பேச தூது அனுப்பிய நிலையில், “இப்போதைக்கு நீங்கள் வர வேண்டாம்” என கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க உத்தரவிட்ட நிலையிலேயே கர்நாடகா இந்த கேட்டைச் சாத்தும் நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனிடையே, இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன்னிச்சையாகச் செயல்பட நினைத்துத் தமிழக முதலமைச்சர் தற்போது அரசியல் ரீதியாகத் தனிமைப்பட்டு நிற்கிறார் எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்..

கர்நாடகத்தைப் பொறுத்தவரைத் தமிழ்நாட்டை வெறும் உபரிநீரை வெளியேற்றும் வடிகாலாகவே பார்க்கிறார்கள் என்பதை வரலாறு சுட்டிக்காட்டுகிறது. எனவே, தண்ணீரைத் தர மறுக்கும் ஒரு மாநிலத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனளிக்காது என்றும், சட்டரீதியாகப் போராடுவதே தீர்வைத் தரும் என்றும் கடந்தகால அனுபவங்கள் மூலம் அறிந்துகொள்ள வேண்டும். ஆனால், தான் நேரில் சென்றால் காவிரியைக் கையோடு கொண்டுவந்து விடலாம் என்ற தவறான கணக்கீட்டில் செயல்பட்டு, முதலமைச்சர் தமிழகத்தின் கௌரவத்தைச் சமரசம் செய்துவிட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தமிழக முதலமைச்சரின் வருகையை நிராகரித்த கையோடு, ஆகஸ்ட் 2-ஆம் தேதி கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அம்மாநில அரசு தனது ஒற்றுமையை நிரூபித்துள்ளது. இந்தச் சூழலைச் சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், இனியேனும் நாட்டின் உயிர்ப்பிரச்சினையான காவிரி விவகாரத்தைச் சரியான ஆலோசனைகளோடு அணுக வேண்டும் என்றும், தமிழ்நாட்டிலும் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட முதலமைச்சரால் முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Nanthini

Recent Posts

பட்டப்பகலில் பயங்கரம்…! நடந்து சென்ற பெண்களிடம் வேலையை காட்டிய வாலிபர்கள்… இணையத்தில் தீயாய் பரவும் சிசிடிவி காட்சிகள்…!!

தெலங்கானா மாநிலம் ஜன்காமா பகுதியில் உள்ள நெசவாளர் காலனியில் இரண்டு பெண்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு சங்கிலி…

9 minutes ago

BREAKING: 5 திமுக MLA-க்கள் ராஜினாமா?….. தவெக விரித்த பனையூர் வலை…. திமுகவை அதிர வைக்கும் ரகசிய ரிப்போர்ட்….!

திமுகவில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக மாற்றங்களால் சில சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர்கள்…

14 minutes ago

“வருங்கால PM விஜய்யா? ராகுல் காந்தியா?”…. காங்கிரஸின் அதிரடி முடிவால் தவெக கூட்டணியில் புயல்…. பரபரப்பில் தமிழக அரசியல்…!

எதிர்காலப் பிரதமர் விவகாரம் தொடர்பாகத் தவெக மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடையே எழுந்துள்ள கருத்து வேறுபாடுகள் அரசியல் களத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளன.…

20 minutes ago

“இப்படி பேச அசிங்கமா இல்லையா?….. நாவடக்கம் தேவை செங்கோட்டையன்”…. கொதித்தெழுந்த மதிமுக… தமிழ்நாடு அரசியலில் திடீர் பரபரப்பு….!

தவெக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனின் சமீபத்திய பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து, மதிமுக பொருளாளர் மு. செந்திலதிபன் காரசாரமான கண்டன அறிக்கை…

24 minutes ago

மகளிருக்கு ஜாக்பாட்…. உரிமைத் தொகையை உயர்த்தும் CM விஜய்?…. அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!

மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி ஆதாரங்களைப் பெற்று, மகளிருக்கான உரிமைத் தொகையை முதல்வர் விஜய் உயர்த்தி வழங்குவார் என…

30 minutes ago

“தவெகவுடன் அதிமுக  கூட்டணி…. இணைந்து 3 வாரம் ஆச்சு”…. புதுக்கோட்டையில் கு.ப.கிருஷ்ணன் போட்ட வெடி…. தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

"அதிமுக, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து மூன்று வாரங்களுக்கு மேலாகிவிட்டது" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச்…

34 minutes ago