BREAKING: குஷியோ குஷி… தமிழகம் முழுவதும் நாளை முதல்… சற்றுமுன் அரசு சூப்பர் அறிவிப்பு…!

By Nanthini on ஆவணி 25, 2025

Spread the love

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதன் மூலம் ஏராளமான மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். இதனிடையே முதல்வரின் காலை உணவு திட்டம் நகர்ப்புறத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஆகஸ்ட் 26 நாளை முதல் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசின் செய்தி தொடர்பாளர் அமுதா ஐஏஎஸ் அறிவித்துள்ளார்.

இந்த திட்டம் மூலமாக 3 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவார்கள். காலை உணவு திட்டத்தின் மூலம் மாணவர்களின் ஆரோக்கியம் மேம்பட்டு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விரிவாக்க திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.