ss rajamouli was the box office king of indian cinema
ஒரு திரைப்படம் நன்றாக இருந்தால் அந்த நடிகரை தான் மக்கள் பாராட்டுவார்கள், இப்போது தான் சரியாக இயக்குனர்களை பாராட்ட தொடங்கியுள்ளனர் மக்கள். அதேபோல் நடிகர்கள் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பார்கள், இயக்குனர்கள் யார் என்றே மக்களுக்கு தெரியாமல் இருக்கும். ஆனால் இப்போது அப்படி அல்ல, மக்கள் இயக்குனர்களையும் கண்டுகொள்ள தொடங்கி விட்டார்கள்.
SS Rajamouli
நடிகர்களை விட இயக்குனர்கள் சம்பளம் கம்மியாக வாங்கி வருகிறார்கள், அதில் பிரம்மாண்ட படங்களை கொடுத்த இயக்குனர்கள் மட்டும் விதிவிலக்கு. ஒரு படம் நன்றாக ஓடுகிறது என்றால் அதில் நடிகரை விட இயக்குனருக்கு தான் பங்கு அதிகம். இந்தியா சினிமாவில் பல இயக்குனர்கள் உள்ளார்கள், குறிப்பாக பிரம்மாண்ட இயக்குனர்கள் பலர் உள்ளார்கள். ஷங்கர், ராஜமவுலி, பிரசாந்த் நீல் என ஆரம்பித்து ஹிந்தியில் சஞ்சய் லீலா பன்சாலி, ரோஹித் ஷெட்டி, ஹிரானி என பலர் உள்ளனர்.
Rajamouli was the successful box office director
இவர்களை நம்பி 500 கோடி வரை நம்பி செலவழிக்கும் தயாரிப்பாளர்களும் உண்டு. ஆனால் போட்ட பணத்தை விட 10 மடங்கு லாபம் தரும் இயக்குனர் என்றால் அது எஸ்.எஸ்.ராஜமவுலி தான். இந்தியாவின் அதிக வசூலித்த படத்தின் இயக்குனர் என்ற பெருமை ராஜமௌலியை தான் சாரும். வெறும் 12 படங்கள் மட்டுமே இயக்கியுள்ள ராஜமௌலி திரையுலகிற்கு கிட்டத்தட்ட 4000 கோடி வசூலை கொடுத்துள்ளார்.
RRR and Bahubali
12 படங்கள் இயக்கியுள்ள ராஜமவுலியை இந்தியா முழுக்க தெரிய வைத்தது பாகுபலி படம் தான். ஆர்.ஆர்.ஆர் இவரை ஆஸ்கருக்கே அழைத்து சென்று விட்டது. ஆனால் அதற்கு முன்பே மகதீரா, ஈகா போன்ற படங்களை இயக்கி அசரவைத்தவர் ராஜமௌலி. பாகுபலி இரண்டு பாகங்களும் சேர்த்து 2400 கோடி வசூல் தந்தது. ஆர்.ஆர்.ஆர் வசூல் 1308 கோடி.
Magadheera and Eega
மகதீரா வசூல் 150 கோடி, ஈகா படத்தின் வசூல் 125 கோடி. ஆக இவர் மட்டும் தான் இவரின் படங்களால் 4251 கோடி வசூலை சினிமா உலகிற்கு தந்துள்ளார். ராஜமவுலி நம் இந்தியா சினிமா என்னும் கீரிடத்தில் ஒரு ராஜ மாணிக்கம் என்பதை மறுக்க முடியாது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…