பிரபல நகைச்சுவை நடிகரான கிருஷ்ணமூர்த்தி, கர்நாடக இசை பாடகி எம்.எல் வசந்தகுமாரி ஆகியோரின் மகள் நடிகை ஸ்ரீவித்யா. ஒரு விபத்தில் கிருஷ்ணமூர்த்தியின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் குடும்ப பொறுப்புகளை வசந்தகுமாரி தான் பார்த்து வந்தார். பொருளாதார நெருக்கடி காரணமாக 14 வயது இருக்கும்போதே ஸ்ரீவித்யா சினிமாவிற்குள் நுழைந்தார். முதன்முதலாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த திருவருட்செல்வன் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு பெத்த ராஷி பெத்தம்மா என்ற திரைப்படம் மூலம் தெலுங்கு சினிமாவிலும் என்ட்ரி கொடுத்தார்.

இவரது திறமைக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தது. இயக்குனர் தாசரி நாராயணன் ஊக்கம் கொடுத்ததால் பல்வேறு திரைப்படங்களில் ஸ்ரீவித்யா நடித்த கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உடன் இணைந்து ஸ்ரீவித்யா நடித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. தெலுங்கிலும் ரீமிக்ஸ் செய்யப்பட்டது. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழியிலும் ஸ்ரீவித்யா முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

கமல்ஹாசனும் ஸ்ரீவித்யாவும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். ஆனால் திருமணத்திற்கு ஸ்ரீவித்யாவின் தாய் ஒப்புக்கொள்ளாததால் இருவரும் காதலை முறித்துக் கொண்டனர். கடந்த 1978 ஆம் ஆண்டு இயக்குனர் ஜார்ஜ் தாமஸ் என்பவரை ஸ்ரீவித்யா திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு தனது கணவரின் விருப்பத்திற்கு ஏற்ப சினிமாவிலிருந்து விலகினார். ஆனால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் மீண்டும் ஸ்ரீவித்யா சினிமாவிற்குள் நுழைந்தார். அவரது கணவர் ஸ்ரீவித்யாவின் சொத்துக்களை அபகரித்ததாக தெரிகிறது.

கடந்த 19 80 ஆம் ஆண்டு ஸ்ரீவித்யா விவாகரத்து பெற்ற கணவரை விட்டு பிரிந்தார். இதனை தொடர்ந்து சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் ஸ்ரீவித்யா நடித்தார். எதிர்பாராதவிதமாக 2003 ஆம் ஆண்டு ஸ்ரீவித்யாவின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. புற்றுநோயால் அவதிப்பட்ட ஸ்ரீவித்யா தனது கோடிக்கணக்கான சொத்துக்களை இசை மற்றும் நடன கல்லூரியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி தொகையாக வழங்க நினைத்தார். அதன் பிறகு நடிகர் கணேசன் உதவியுடன் அறக்கட்டளை ஒன்றை நிறுவி தகுதியானவர்களுக்கு உதவிகள் செய்தார். பின்னர் 2006 ஆம் ஆண்டு 53 வயதில் உயிரிழந்தார்.

