“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” அந்த வார்த்தைக்காக காத்திருக்கிறேன்… விஜய்மா நீ வருவ… ஸ்ரீமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

By Swetha on வைகாசி 9, 2026

Spread the love

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “விஜய்மா.. நீ வருவ” என்ற வாஞ்சையான அழைப்புடன் தனது செய்தியைத் தொடங்கியுள்ள அவர், விஜய் முதலமைச்சர் நாற்காலியில் அமர வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” என்று உறுதிமொழி கூறி விஜய் அந்தப் பதவியில் அமர வேண்டும் என்பதே தனது ஆசை என்று ஸ்ரீமன் குறிப்பிட்டுள்ளார். தற்போது நிலவும் கால தாமதங்கள் சகஜமானதுதான் என்றும், நீதிக்கும் நேர்மைக்கும் விஜய் கொடுக்கும் மரியாதைக்குக் கண்டிப்பாக நல்ல தீர்ப்பு வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்காகத் தான் இறைவனை வேண்டி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

   

முதலமைச்சர் ஆனதற்குப் பிறகு இது போன்ற வார்த்தைகளைச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை என்பதால், இப்போதே தனது அன்பை வெளிப்படுத்துவதாக ஸ்ரீமன் தெரிவித்துள்ளார். விஜய்யின் அரசியல் வருகையை வரவேற்று, அவர் அந்தப் பதவியை விரைவில் அடைய வேண்டும் என்று மனதார வாழ்த்தி இந்தச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.