நள்ளிரவில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 35 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் நான்கு படகுகள், மீன்கள் மற்றும் வலைகளையும் பறிமுதல் செய்துள்ளதால் மீனவர்களின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் காங்கேஷன் துறைமுக முகாமிற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருவது வேதனை அளிக்கிறது.
