இரவோடு இரவாக இன்ப அதிர்ச்சி..! சிறப்பு நிதியாக ரூ.7000 உயர்வு.. தமிழக அரசு அறிவிப்பு..!!

By Soundarya on பங்குனி 15, 2026

Spread the love

தமிழக அரசு மின் வாரிய ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வை அறிவித்துள்ளது. இந்த உயர்வு, 2023 டிசம்பர் 1-ஆம் தேதியன்று ஊழியர்கள் வாங்கிய அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும். மேலும், ஒரு சிறப்புச் சலுகையாக, அதே தேதியில் 10 ஆண்டுகள் பணியை நிறைவு செய்தவர்களுக்கு கூடுதலாக 3 சதவீத ஊதிய உயர்வு (Service Weightage) வழங்கப்பட உள்ளது. இது நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் ஊழியர்களுக்குக் கூடுதல் பலனைத் தரும்.

ஊதிய உயர்வுடன் சேர்த்து, அலுவலர்களின் பொறுப்பு மற்றும் பதவிக்கு ஏற்ப ₹3,000 முதல் ₹7,000 வரை சிறப்புப் படிகள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த கால நிலுவையைப் பொறுத்தவரை, 2023 டிசம்பர் முதல் 2025 நவம்பர் வரையிலான காலத்திற்கு மாதந்தோறும் ₹500 கருணைத் தொகையாக அளிக்கப்படும். அதேபோல், 2025 டிசம்பர் 1 முதல் 2026 பிப்ரவரி 28 வரையிலான ஊதிய உயர்வு நிலுவைத் தொகை (Arrears) ஒரே தவணையாக ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

   

மார்ச் 14, 2026 அன்று தொழிற்சங்கங்களுடன் நடத்தப்பட்ட சுமுகமான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கான பணப்பலன்கள் 2025, டிசம்பர் 1-ஆம் தேதி முதல் கணக்கிட்டு நடைமுறைப்படுத்தப்படும். அரசின் இந்த அதிரடி அறிவிப்பு, மின் வாரியத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.