தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் பொதுமக்களின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி வார விடுமுறையை முன்னிட்டு மக்களின் வசதிக்காக அரசு சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் கூட்ட நெரிசல் என்று ஊர்களுக்கு செல்ல டிசம்பர் 12 இன்று முதல் டிசம்பர் 14ஆம் தேதி வரை சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து சுமார் 1000 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. இதுவரை 20000 பேர் வரை டிக்கெட் புக்கிங் செய்துள்ள நிலையில் ஊருக்கு செல்ல தயாராக இருப்பவர்கள் www.tnstc.in இணையத்தளம் அல்லது TNSTC செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணத்தை எளிதாக்கலாம்.
