“சத்தமே இல்லாமல் சம்பவம் செய்த சூரி!”… புதிய பட சம்பளம் இத்தனை கோடியா?”… மிரண்டு போன திரையுலகம்…!!

By Muthu Mani on பங்குனி 28, 2026

Spread the love

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகப் பயணத்தைத் தொடங்கி, இன்று முன்னணி கதாநாயகனாக உருவெடுத்துள்ள நடிகர் சூரி, தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளார். வெற்றிமாறனின் ‘விடுதலை’ மற்றும் சமீபத்திய ‘கருடன்’ திரைப்படங்களின் பிரம்மாண்ட வெற்றி, வணிக ரீதியாக அவரது சந்தை மதிப்பை வெகுவாக உயர்த்தியுள்ளது. தற்போது அறிமுக இயக்குனர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ‘மண்டாடி’ திரைப்படத்தில் நடித்து வரும் அவர், தனது அடுத்தடுத்த கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், ‘இன்று நேற்று நாளை’ மற்றும் ‘அயலான்’ படங்களின் புகழ் பெற்ற இயக்குனர் ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் சூரி புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்தப் படத்திற்காக சூரி சுமார் 25 கோடி ரூபாய் சம்பளம் கேட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அவர் முந்தைய படங்களில் வாங்கியதை விட மிக அதிகப்படியான தொகையாகக் கருதப்பட்டாலும், தொடர் வெற்றிகள் காரணமாக தயாரிப்பு தரப்பு இதற்கு இணங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.