வாயைக் கிழித்து காலணியால் அடி…. ரூ.50,000 கடனுக்காக 10-ஆம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்… இருளர் சமூக மாணவன் மீதான கொடூரத் தாக்குதலின் அதிர்ச்சி உண்மை…!

Spread the love

விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே உள்ள சிறுவாலை கிராமத்தைச் சேர்ந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்த தம்பதியினர், செல்லங்குப்பம் பகுதியில் செங்கல் சூளை நடத்தி வரும் பிரபாகரன் என்பவரிடம் 50,000 ரூபாய் முன்பணம் பெற்றுக்கொண்டு அங்கு வேலை செய்து வந்துள்ளனர். வாங்கிய கடன் முழுமையாகக் கழிவதற்குள் அவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பியதால், பணத்தைத் திருப்பித் தருமாறு பிரபாகரன் தொடர்ந்து மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. குடும்பச் சூழ்நிலை காரணமாக சில நாட்களில் பணத்தைத் தந்துவிடுவதாக அவர்கள் உறுதியளித்தும், உடனடியாகப் பணத்தைக் கேட்டு பிரபாகரன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற அந்தத் தம்பதியினரின் 15 வயதுடைய 10-ஆம் வகுப்பு மகனை, பிரபாகரனும் மற்றொரு அடையாளம் தெரியாத நபரும் பள்ளிக்கு அருகே மறித்துக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். வாயைத் துணியால் கட்டி, காலணியால் அடித்ததுடன், பிளேடால் வாயைக் கிழித்து வயிற்றிலும் முதுகிலும் படுகாயப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட மாணவர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபடி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து மாணவரின் தந்தை அளித்த புகாரின் பேரில், கெடார் காவல் துறையினர் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பிரபாகரனைக் கைது செய்துள்ளனர்; மேலும், தலைமறைவாக உள்ள மற்றொரு நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

அய்யோ அவமானம்..! உலகக்கோப்பை மேட்ச் பார்க்க குடும்பமே ஒண்ணா கூடினப்போ டிவியில் அந்த வீடியோ… மாட்டிட்டு முழித்த தாத்தாவின் அதிர்ச்சி வைரல் வீடியோ..!

2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஒன்றாக அமர்ந்து பார்ப்பதற்காக ஒரு குடும்பத்தினர் தங்களது வீட்டுத் தொலைக்காட்சியின் முன்னால்…

10 minutes ago

அதிமுகவிலிருந்து நானாக வெளியேறவில்லை… அங்கே நடந்தது என்ன தெரியுமா..? உண்மையை உடைத்த ஓபிஎஸ்..!!

சென்னையில் இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம்,…

20 minutes ago

பகீர்..! “எனக்கு என் காதலனே முக்கியம்” 6 வயது மகன் கண்முன்னே தாய் செய்த காரியம்… கண்ணை மறைத்த கள்ளக்காதல்… துடிதுடித்து இறந்த தொழிலதிபர் கணவன்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட நிஹாரிகா என்ற…

30 minutes ago

கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா.? பிணத்தின் காதில் இருந்த கம்மலைத் திருடிய அரசு மருத்துவமனை ஊழியர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்ட அரசு மருத்துவமனையில், உயிரிழந்த பெண்ணின் உடலிலிருந்து கம்மலைத் திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

39 minutes ago

மாஸ்கோ மீது 555 ட்ரோன்கள் வீச்சு… உக்ரைனின் மெகா தாக்குதலில் பற்றி எரிந்த ரஷ்யா… “இது நியாயமான பதிலடி” என ஜெலஸ்கி பதிவு..!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து…

47 minutes ago

PM உஜ்வாலா 3.0: ஏழைப் பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்..? முழு விவரம் இதோ..!!

மத்திய அரசின் 'பிஎம் உஜ்வாலா யோஜனா 3.0' திட்டத்தின்கீழ், வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு புதிய எல்பிஜி…

60 minutes ago