மும்பையைச் சேர்ந்த ஆஷிஷ் ஜெயின் என்பவர் தனது பெற்றோரை ஆச்சரியப்படுத்தும் விதமாக புத்தம் புதிய பிளாட்டை வாங்கி இணையத்தில் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டார். அவர்களின் உணர்ச்சிகரமான தருணங்களை வீடியோவாக பதிவு செய்தது, அந்த வீடியோ விரைவில் வைரலானது. தற்போது பரவலாக பகிரப்படும் இந்த வீடியோவில் , தம்பதியினர் வாடகைக்கு எடுக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்குள் நடந்து செல்வதையும், அந்த வீடு உண்மையில் அவர்களுக்குச் சொந்தமானது என்பதை சில நிமிடங்கள் கழித்துக் கண்டுபிடித்ததையும் காட்டுகிறது.
வீடியோவில், ஜெயின் தனது பெற்றோருடன் புதிதாக அலங்கரிக்கப்பட்ட ஃப்ளாட்டில் நிற்கிறார். அவரது தந்தையும் தாயும் இது மற்றொரு வாடகை வீடு என்று நினைக்கிறார்கள். ஆனால் ஜெயின் விரைவில் ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறார். அதாவது வீட்டு பத்திரத்தில் உள்ள பெயர்களும் பிரதான கதவின் பெயர்ப் பலகையும் அவர்களுடையது என்று அவர் அவர்களிடம் சொல்லும்போது, இரு பெற்றோரும் நம்ப முடியாமல் உறைந்து போகிறார்கள். இந்த வீடியோ வைரலாக நிலையில் சமூக ஊடக பயனர்கள் ஜெயின் தனது பெற்றோரை இவ்வளவு மனமார்ந்த முறையில் கௌரவித்ததற்காக அவரைப் பாராட்டினர், பலர் இந்த செயலை ‘ஒவ்வொரு பெற்றோரின் கனவு’ என்று அழைத்தனர். ஆயிரக்கணக்கானோர் கருத்துகளை தெரிவித்தனர்.
மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானை…
சர்வதேச அரசியல் மேடையில் அமெரிக்கா மற்றும் கியூபா இடையிலான உறவு மீண்டும் ஒரு இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக, வெனிசுலாவின்…
சிரிப்புக்கும் குதூகலத்திற்கும் பெயர்போன 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி, தற்போது சர்ச்சைகளுக்கும் சென்டிமென்ட் காட்சிகளுக்கும் களமாக மாறியிருப்பது ரசிகர்கள் மத்தியில்…
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடங்கியுள்ள நிலையில், தற்போது ஆசியாவின் மற்றொரு முக்கியப் பகுதியான…
தூத்துக்குடி மட்டக்கடை கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மனைவி பிரேமா (58), தனது வீட்டில் வழக்கம்போல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து…
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் போர்க்களமாக மாறியுள்ளது. குறிப்பாக,…