“பொண்டாட்டி வீட்ல இல்ல, உன் மேல எனக்கு ரொம்ப நாளா ஆசை”…. மாமியாரையே கதற கதற கற்பழித்து கொன்ற மருமகன்…. வீடு திருப்பிய மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி…..!

By Nanthini on மாசி 14, 2026

Spread the love

தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தில் மருமகன் ஒருவன் தனது மாமியாரையே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்வகுர்த்தி பகுதியைச் சேர்ந்த நரசிம்மா (40) என்பவருக்கும், மல்லிகா  என்பவரின் இளைய மகளுக்கும் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை செய்து வந்த நரசிம்மா, மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் வேலைக்குச் செல்லாமல் முடங்கியதோடு, போதையில் மனைவியைச் சித்திரவதை செய்துள்ளார்.

கணவனின் கொடுமை தாங்க முடியாமல் மனைவி தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்குச் சென்று தங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நரசிம்மா, அடிக்கடி மாமியார் வீட்டிற்குச் சென்று தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி மல்லிகாவின் மகளும் பேரக்குழந்தைகளும் ஒரு திருமண விசேஷத்திற்காக உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தனர். வீட்டில் மல்லிகா மட்டும் தனியாக இருப்பதை அறிந்த நரசிம்மா, அன்று மாலை போதையில் அங்கு வந்துள்ளார்.

   

வீட்டில் தனியாக இருந்த மாமியாரை வழிமறித்த நரசிம்மா, அவர் மீது தனக்கு நீண்ட நாட்களாக ஆசை இருந்ததாகக் கூறி, வலுக்கட்டாயமாகப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். வயது முதிர்ந்தவர் என்றும் பாராமல், அவர் அலறியும் பொருட்படுத்தாமல் வன்கொடுமை செய்ததோடு, பின்னர் அவரைத் தாக்கி கொடூரமாகக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். விசேஷம் முடிந்து வீடு திரும்பிய மகள், தனது தாய் ரத்த வெள்ளத்தில் சடலமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார்.

   

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கல்வகுர்த்தி போலீசார், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் நரசிம்மா மீது சந்தேகம் வலுக்கவே, தலைமறைவாக இருந்த அவரைப் பிடித்துப் போலீசார் விசாரித்தனர். அப்போது, மதுபோதையில் மாமியாரை வன்கொடுமை செய்து கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள நரசிம்மா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.