CINEMA
மாமனார் ரஜினியின் பேச்சை மீறி அதுக்காக 180 கோடியை வாரி இறைத்த தனுஷ்.. ஐஸ்வர்யா – தனுஷ் பிரிவிற்கு இது தான் காரணமா..?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன்தான் நடிகர் தனுஷ். ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தனுஷ் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். லிங்கா, யாத்ரா என இரண்டு பேரன்கள் ரஜினிக்கு உள்ளனர். காதல் தம்பதியாக சந்தோஷமாக வாழ்ந்து வந்த தனுஷ், ஐஸ்வர்யாவுக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாடு, மனக்கசப்பு ஒரு கட்டத்தில் இருவரும் பிரியும் சூழலை ஏற்படுத்தியது. கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக இருவரும் பிரிந்து வாழும் நிலையில், பேரப்பிள்ளைகள் மட்டும் இருவரும் ரஜினி, கஸ்தூரி ராஜா வீடுகளில் மாறி மாறி வாழ்கின்றனர்.
தனுஷின் அப்பா கஸ்தூரிராஜா, துவக்கத்தில் சினிமா துறையில் கஷ்டப்பட்டவர். விசுவிடம் அசிஸ்டெண்டாக இருந்து பின் இயக்குநரானவர். தனுஷ், செல்வராகவன் தமிழ் சினிமாவில் காலூன்றிய பிறகுதான் கஸ்தூரிராஜா குடும்பத்தின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. ஆனால், ரஜினி குடும்பம் கோடீஸ்வர குடும்பம். பரம்பரை பணக்காரராக லதா ரஜினிகாந்த் குடும்பம், கஸ்தூரிராஜா குடும்பத்தை பெரிதாக மதிக்கவில்லை எனத்தெரிகிறது. குறிப்பாக ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இருவீட்டு சம்பந்திகள் பங்கேற்ற சில விசேஷங்களில் தனுஷ் குடும்பத்தினர் அவமானப்படுத்தப்பட்டது, தனுஷூக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியது.
இதற்கு பிறகு, ரஜினி வீடு அருகிலேயே மிக பிரமாண்டமான பங்களா ஒன்றை கட்ட முடிவு செய்தார். இதை ஒரு சவாலாகவே அவர் எடுத்துக்கொண்டு நிறைய படங்களில் நடித்தார். ஜெயலலிதா, ரஜினிகாந்த் வீடுகள் மட்டுமே பெருமையாக பேசப்படும் போயஸ்கார்டனில், இப்போது தனுஷ் வீடுதான் மிகப்பெரிய பங்களாக இருக்கிறது. நீச்சல் குளம், ஜிம், கிரிக்கெட் பிட்ச், பியூட்டி பார்லர், மினி தியேட்டர் என பலதரப்பட்ட நவீன வசதிகளுடன் இந்த பங்களா ரூ. 180 கோடி செலவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டது.
ஆனால் அந்த வீட்டில் தனுஷ், ஐஸ்வர்யா தங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து வாழவில்லை என்பதுதான் மிகப்பெரிய வேதனை. அந்த இடம், வாஸ்துபடி சரியில்லை. அந்த இடத்தை வாங்க வேண்டாம் என துவக்கத்திலேயே ரஜினி தனுஷிடம் கூறியிருக்கிறார். ஆனால் தனுஷ் அதை கேட்கவில்லை. அதன்விளைவுதான் இந்த பிரிவு என்று நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார் சினிமா விமர்சகர் செய்யாறு பாலு.