ஆம்பூர் அருகே பள்ளிக்கு செல்லுமாறு தாய் கூறியதால் 9 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாத கடப்பா பகுதியை சேர்ந்த நாகேஷ் என்பவருடைய மகன் அருள். இவர் ரெட்டி தோப்பு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் நிலையில் பள்ளிக்கு சரிவர செல்லாமல் இருந்துள்ளார். இதனால் அவருடைய தாய் உஷா மகனை பள்ளிக்கு செல்லாததால் திட்டிவிட்டு வேலைக்குச் சென்றுள்ளார். இதனால் அருள் வீட்டில் செடிகளுக்கு கிடைக்கும் பூச்சி மருந்தை குடித்துவிட்டு வீட்டிலேயே படுத்துக் கொண்டிருந்தான்.
அப்போது அங்கு வந்த சகோதரி எதற்காக படுத்துக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டதற்கு அம்மா திட்டியதால் நான் பூச்சி மருந்து குடித்துவிட்டேன் என்று கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சகோதரி நந்தினி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தம்பியை நீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மகனை பள்ளிக்கு செல்லுமாறு தாய் திட்டியதால் சிறுவன் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…