Connect with us

மாறி மாறி அளிக்கும் புகார்.. சீரியல் நடிகை ஜெயலட்சுமி – பாடலாசிரியார் சினேகன் இடையில் என்ன தான் நடந்தது..?

CINEMA

மாறி மாறி அளிக்கும் புகார்.. சீரியல் நடிகை ஜெயலட்சுமி – பாடலாசிரியார் சினேகன் இடையில் என்ன தான் நடந்தது..?

 

தமிழ் சினிமா துறையில் பாடல் ஆசிரியராகவும் மக்கள் நீதி மைய கட்சியின் செயலாளராகவும் இருக்கிறவர் தான் சினேகன். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகை ஜெயலட்சுமி மீது மோசடி வழக்கு ஒன்று சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் அளித்திருந்தார்,பாடலாசிரியர் சினேகன் அவர்கள் சினேகன் அறக்கட்டளை என்று ஒரு அறக்கட்டளை நடத்தி வருகிறார்,

ஜெயலட்சுமி தன் அறக்கட்டளையின் பெயரில் இணையதளத்தில் சினேகன் அறக்கட்டளை என்று பொய்யான கணக்கை ஒன்று ஆரம்பித்து அதன் மூலம் மோசடி செய்து வருகிறார் அது தன் மேலும் என் அறக்கட்டளை மீதும் கலங்கம் ஏற்பட்டு வருகிறது என்று தவித்துள்ளார், இதை அறிந்த சினேகன் அவர்கள் சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாசம் ஐந்தாம் இவர் மோசடி செய்து உள்ளார் என்று புகார் அளித்துள்ளார். அதற்கு அடுத்ததாக நடிகையும், பாஜக நிர்வாகியமான ஜெயலட்சுமி சிநேகன் மீது புகார் ஒன்று அளித்துள்ளார், என் மேல் பொய்யான வழக்கு தொடர்ந்து இருக்கிறார், இந்த அறக்கட்டளை நான் நடத்தி வருகிறேன்,

   

இந்த அறக்கட்டளை மூலமாக வரும் பணத்தை நான் ஏழை எளிய மக்களுக்கு உதவியாக தருகிறேன், இவர் பேமஸ் ஆக வேண்டும் என்பதற்காக என் மேல் போலியாக வளர்க்குத் தொடர்ந்து அதை வைத்து இவர் பல படங்களில் வாய்ப்பு தேடி வருகிறார், என்று ஜெயலட்சுமி சிநேகனை மேல் கண்டனம் தெரிவித்திருந்தார்கள். இது என்னுடைய அறக்கட்டளை என்றும் இவர்தான் மோசடி செய்கிறார் என்றும் வழக்கு நாடி உள்ளார், ஆனால் தற்போது போலீசார் கண்டறிந்து உண்மையை வெளி கொண்டு வந்துள்ளார்கள். சினேகன் 2015 ஆம் ஆண்டு அறக்கட்டளை உருவாக்கியுள்ளார்.

ஆனால் நடிகை ஜெயலட்சுமி அவர்கள் 2018 ஆம் ஆண்டு தான் இந்த அறக்கட்டளையை போலியாக தயாரித்து அதன் மூலம் பணம் திரட்டி மோசடி செய்து வருகிறார் என்று அப்பட்டமாக காவல்துறையினர் கண்டறிந்து விட்டார்கள், அதற்கடுத்தவாறு போலீசார் நடிகை ஜெயலட்சுமி அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் தங்கி இருக்கும் அவரை கைது செய்து திருமணம் காவல் நிலையத்தில் அளைத்து வந்து அவர் மேல் மோசடி மற்றும் போலியான கணக்கு ஆரம்பித்திருந்ததால், இரண்டு வழக்கு போட்டு அவரை தற்போது கைது செய்து உள்ளார்கள்.

author avatar
Ranjith Kumar
Continue Reading
To Top