Connect with us

சரத்பாபு என் கணவரா…? நம்பியாருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்..? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சினேகா நம்பியார்..!!

CINEMA

சரத்பாபு என் கணவரா…? நம்பியாருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்..? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சினேகா நம்பியார்..!!

 

தென்னிந்திய சினிமாவில் 1970-களில் தொடங்கி 1990-வரை சாக்லேட் பாயாக நடித்த பிரபலமானவர் சரத்பாபு. இவர் நடித்த பணக்கார பையன், நண்பன் போன்ற திரைப்படங்கள் இவரை பிரபலமாக்கியது. கடந்த 1977-ஆம் ஆண்டு வெளியான பட்டின பிரவேசம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சரத்பாபு நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் நிழல் நிஜமாகிறது என்ற படத்தின் மூலம் ரசிகர்களை ஈர்த்தார். கடைசியாக தமிழில் வசந்த முல்லை என்ற படத்தில் நடித்துள்ளார்.

   

சுமார் 50 வருடங்களுக்கு மேலாக 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக செப்சிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட சரத்பாபு சமீபத்தில் உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வந்தனர். சரத்பாபுவின் முதல் மனைவி நடிகை ரம்பா பிரபா சில பிரச்சனைகள் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து சென்று விட்டார். அவர்கள் 14 வருடங்கள் இணைந்து வாழ்ந்தார்கள். இதனையடுத்து சரத் பாபு நம்பியாரின் மகள் சினேகாவை இரண்டாவதாக திருமணம் செய்தார்.

இருவரும் 25 ஆண்டுகளுக்கு மேலாக கணவன் மனைவியாக வாழ்ந்தனர். இது தொடர்பாக சினேகா நம்பியார் ஒரு பேட்டியில் கூறியதாவது, என்னுடைய அப்பா பெயர் நம்பியார். நம்பியார் என்பது ஜாதியை குறிக்கும். இது கண்ணூரில் இருக்கக்கூடிய மிகச் சிறிய ஜாதி குழு. நான் சினிமாவில் நடிக்க சென்னைக்கு வந்த போது சினேகா என்ற பெயரில் நிறைய பேர் இருந்தார்கள். இதனால் எனது பெயருக்கு பின்னால் அப்பாவின் பெயரை சேர்த்து சினேகா நம்பியார் என மாற்றிக் கொண்டேன்.

இதனால் எல்லாரும் என்னை நம்பியாரின் மகள் என நினைத்து கொண்டார்கள். அது மட்டுமில்லாமல் நம்பியாரின் மகள் பெயரும் சினேகா நம்பியார் தான். உண்மையில் நான் நம்பியாரின் மகள் அல்ல. சமீபத்தில் உயிரிழந்த நடிகர் சரத்பாபுவின் இரண்டாவது மனைவியும் அல்ல. சமூக வலைதளத்தில் எனது புகைப்படத்தை பதிவிட்டு நான் அவரது இரண்டாவது மனைவி என எழுதி இருக்கிறார்கள். நியூஸ் சேனல்களிலும் நான்தான் சரத்பாபுவின் இரண்டாவது மனைவி என கூறுகிறார்கள்.

 

அதிலும் சிலர் நான் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டேன் என சர்ச்சையை கிளப்பி உள்ளனர். இதெல்லாம் பார்க்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு. ஒருமுறை என்னை தொடர்பு கொண்டு கேட்டிருந்தாலே உண்மை தெரிந்து இருக்கும். ஆனால் யாரும் என்னிடம் இதைப் பற்றி கேட்காமல் தவறாக சமூக வலைதளத்தில் சித்தரித்து உள்ளனர். இதை நான் எடுத்துக் கொண்டது போல எனது குடும்பமும் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தயவு செய்து இது மாதிரியான தவறான செய்திகளை பரப்பாதீர்கள் என வேதனையுடன் கூறியுள்ளார்.

author avatar
Priya Ram
Continue Reading
To Top