இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை மற்றும் துணை கேப்டனான ஸ்மிருதி மந்தனா தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டத்தை சில தினங்களுக்கு முன் உறுதி செய்தார். சமீபத்தில் நடந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் முறையாக கோப்பையை வென்று சாதனைப் படைத்திருந்தது. இந்த வெற்றிக்கு ஸ்மிருதி மந்தனாவும் ஒரு முக்கியக் காரணமாக இருந்தார்.
இதற்கிடையில் ஸ்மிருந்தி மந்தனா, பிரபல இந்தி இசையமைப்பாளரான மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பலாஷ் முச்சல் என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் நேற்று இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுடன் அவருக்குத் திருமணம் நடைபெற இருந்த நிலையில், ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாகவே இந்தத் திருமணம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அவரது வருங்கால கணவர் பலாஷ் முச்சலும் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
