நடிகை சினேகா மாடர்ன் உடையில் அழகான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சினேகா. தமிழில் இவர் ‘என்னவளே’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம், விரும்புகிறேன், ஏப்ரல் மாதத்தில், ஆட்டோகிராப், வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.
தமிழை தாண்டி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டாமல் குடும்ப பாங்காகவே நடித்து ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்துள்ளார். தனக்கென ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ள சினேகா, நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துக்கொண்டு குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகை சினேகா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு வருவார்.இந்நிலையில் தற்போது சினேகா மாடர்ன் உடையில் அழகான போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அப்புகைப்படங்களை பார்த்த அவரது கணவர் பிரசன்னா ‘அழகி’என கமெண்ட் செய்துள்ளார்.தற்பொழுது இந்த பதிவு வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…