தமிழகத்தில் அரசு பள்ளியில் திறன் இயக்கத்தில் பயிற்சி பெறும் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாரம் தோறும் தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மொழி பாடம் மற்றும் கணித திறனை மேம்படுத்தும் வகையில் திறன் என்ற இயக்கம் 6 மாதம் மேற்கொள்ளப்பட்ட உள்ளது. இந்த திறன் இயக்கம் பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்தப்பட வேண்டும். திறன் இயக்க மாணவர்கள் தனியாக பிரித்து அமர வைக்கப்பட்டு வகுப்பறை செயல்பாடுகள் தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.
அதன்படி ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அடிப்படை கற்றல் தேர்வு நடத்தப்பட வேண்டும். அதில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் திறன் இயக்கத்தில் மாணவர்களை சேர்த்து பயிற்சி பெற வேண்டும். தமிழ், ஆங்கில மற்றும் கணித பாட வகுப்புகளுக்கு தலா 90 நிமிடம் வீதம் 30 நாட்களுக்கு திறன் இயக்க மாணவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். இதனைத் தவிர வாரம் தோறும் வெள்ளிக்கிழமை அந்த வாரத்தில் நடத்தப்பட்ட பாடங்களில் இருந்து பத்து மதிப்பெண்களுக்கு தேர்வுகளை நடத்த வேண்டும். இதற்கான ஆசிரியர் கையேடு மற்றும் மாணவர் பயிற்சி புத்தகம் பள்ளிகளுக்கு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
