தமிழக அரசியல் வட்டாரங்களை ஒட்டுமொத்தமாக அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சமீபத்திய ஆட்சி மாற்றத்திற்குத் தேர்தலுக்கு முந்தைய கடைசி 3 நாட்கள் தான் முக்கியக் காரணம் என்று குறிப்பிட்ட அவர், கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் சந்தித்த தோல்வி ஒவ்வொரு உடன்பிறப்பின் மனதிலும் மாறாத வடுவாக, ஆறாத காயமாக மாறிவிட்டது என்று உணர்ச்சிப் பொங்கத் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல், தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய் ஒன்றும் உண்மையான முதல்வர் கிடையாது என்றும், அவரது பின்னணியில் இருக்கும் ஆதவ் அர்ச்சுனா தான் நிஜ முதல்வர் என்றும் சாடியுள்ளார். மேலும், தற்போதைய அமைச்சர்கள் அனைவரும் வெறும் ‘ஜோக்கர்களாக’ இருக்கிறார்கள் என்று அவர் கூறியுள்ள காட்டமான விமர்சனம், தமிழக அரசியல் களத்தில் பயங்கர அனலைக் கிளப்பியுள்ளது.
