தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் அஜித் தற்போது இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகின்றார். மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். துணிவு திரைப்படத்திற்கு பிறகு அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் கமிட்டான நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு மட்டும் இன்னும் முடிந்த பாடில்லை. ஒரே நாளில் நடக்கும் கதையை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித் கமிட்டான நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்து விட்டது.
இப்படத்தின் படப்பிடிப்பை வெகுவிரைவில் முடித்துவிட்ட நிலையில் படம் விரைவில் வெளியாக உள்ளது. விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். குட் பேட் அக்லி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது மே 1ஆம் தேதி ரிலீஸ் செய்வதற்கு பட குழு திட்டமிட்டு வருகிறது. அஜித் நடிப்பில் உருவாகி வரும் இப்படம் ஏறத்தாழ மே 1ஆம் தேதி வெளியாவது உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் எஸ்கே 23 திரைப்படம் அதே மே ஒன்றாம் தேதி வெளியிடுவதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாக அஜித் திரைப்படம் வெளியானால் அதற்கு போட்டியாக எந்த ஒரு திரைப்படமும் வெளியாகாது. ஆனால் சிவகார்த்திகேயன் சமீபத்தில் அமரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித்துடன் மோத உள்ளார். இந்தச் செய்தி வெளியானது முதலே நடிகர் விஜய் துப்பாக்கியை கையில் கொடுத்தவுடன் தான் விஜய் என்று சிவகார்த்திகேயன் நினைத்துக் கொண்டார் போல என கூறி வருகிறார்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…
பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…
இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…
சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…
தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…