CINEMA
AR முருகதாஸை தொடர்ந்து விஜய் பட இயக்குனர்களை வளைத்து போடும் SK.. குட்டி தளபதியாக போடும் திட்டமா இது..?
சிவகார்த்திகேயனுக்கு படங்களுக்கு மேல் படங்களாக குவிந்து கொண்டிருக்கிறது. முக்கியமாக சொல்ல போனால் விஜய் வைத்து இயக்கி பெரிய ஹிட் கொடுத்த மிகப்பெரிய இயக்குனர்களை வளைத்து போட்டு அவர்களுடன் இணைந்து படம் இயக்கிக் கொண்டிருக்கிறார். சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ராஜ்கமல் தயாரித்து வெளியாக உள்ள படம் தான் “அமரன்”, இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
அமரன் இன்னும் இரண்டு மாத காலங்களில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அமரன் படம் முடிவடைந்த பின், கத்தி, துப்பாக்கி ,சர்க்கார் போன்ற பல கருத்து மிக்க பிரம்மாண்ட படங்களை கொடுத்த ஏ.ஆர் முருகதாஸ் உடன் சிவகார்த்திகேயன் இணைந்து எஸ்.கே 23 உருவாக உள்ளதாக தெரியவந்துள்ளது. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாக ஏ.ஆர் முருகதாஸ் தரப்பிலிருந்து தெரிவித்து இருக்கிறார்கள்.
இப்படத்திற்கு அடுத்தவாறு கடந்த ஆண்டு சிபி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய 100 கோடி பட்ஜெட்டை தொட்டான் பட இயக்குனர் சிபி அவர்கள் மீண்டும் சிவகார்த்திகேயனுடைய நினைந்து எஸ்.கே 24 படத்தை இயக்க உள்ளதா தகவல் தெரிய வந்துள்ளது. அஜித், விஜய் போன்ற மிகப் பெரிய பிரபலங்களை வைத்து இயக்கும் “வெங்கட் பிரபு” தற்போது விஜயின் “கோட்” படப்பிடிப்பில் மிக பிசியாக இயங்கிக் கொண்டிருக்கிறார். தற்போது இவர் விஜயின் படத்தை முடித்த பின் சிவகார்த்திகேயனின் எஸ்.கே 25 படத்தை இவர்தான் இயக்க உள்ளார்.
நடப்பதை பார்த்தால் சிவகார்த்திகேயன் அவர்கள் விஜய் இடத்தை பிடிப்பதற்காக தான் இவ்வளவு திட்டத்தையும் தீட்டி வருகிறார் என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள். தளபதி விஜய் வைத்து இயக்கிய பிரம்மாண்ட படங்களை கொடுத்த மாபெரும் இயக்குனர்களை சிவகார்த்திகேயன் அவர்களின் அடுத்தடுத்து படத்திற்கு புக் செய்து கொண்டே இருக்கிறார். ஒருவேளை இணையதள வாசிகள் பரப்பி வந்தது உண்மைதான் போல், சிவகார்த்திகேயன் அவர்கள் விஜயின் இடத்தை பிடிப்பதற்காக தான் இவ்வளவு விஷயங்களையும் செய்து வருகிறார்கள் என்று பல விமர்சனங்கள் வெளியாகி உள்ளது.