Categories: CINEMA

படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனுக்கு நேர்ந்த எதிர்பாரா விபத்து! ஒரு சீனுக்காக உயிரையே கொடுக்க தயாரா இருந்திருக்குறாரே?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “அது இது எது” நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனதை கொள்ளை கொண்டவர் சிவகார்த்திகேயன். அவர் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றியபோதே அவருக்கு பல ரசிகர்கள் இருந்தார்கள். அதனை தொடர்ந்து அவர் திரைப்படங்களில் நடிக்க வந்த பிறகு அதிகளவில் ரசிகர்கள் குவிந்தனர்.

விஜய், அஜித் திரைப்படங்களுக்கு எந்தளவு வரவேற்பு கிடைக்குமோ அந்தளவுக்கு சிவகார்த்திகேயனின் திரைப்படங்களுக்கு வரவேற்பு கிடைத்தது. அதன் பின் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஆகிப்போனார்.

தற்போது “அமரன்” என்ற  திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். மேலும் ஏ.ஆர்.முருகதாஸ்  இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட நடன இயக்குனர் தினேஷ், சிவகார்த்திகேயனுக்கு நேர்ந்த ஒரு விபத்து குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.

சிவகார்த்திகேயன், சூரி, ஸ்ரீதிவ்யா, சத்யராஜ் ஆகியோரின் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”. இத்திரைப்படம் சிவகார்த்திகேயனின் கெரியரில் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “ஊதா கலர் ரிப்பன்” என்ற பாடல் பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.

இந்த நிலையில் இப்பாடலில்  சிவகார்த்திகேயன் தலைகீழாக தொங்கிக்கொண்டே மேலிருந்து கீழே வருவது போல் ஒரு காட்சி அமைந்திருந்ததாம். அந்த காட்சியில் ஒரு மரத்தின் கிளையின் மேல் கயிறை போட்டு அந்த கயிற்றின் நுனியில் சிவகார்த்திகேயனின் கால்களை கட்டி அவரை தலைகீழாக தொங்கவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறக்கினார்களாம்.

முதல் ஷாட்டும் இரண்டாவது ஷாட்டும் சரியாக அமையாதபடியால் மூன்றாவது ஷாட் எடுக்கும்படியாக ஆனது. மூன்றாவது முறை அவரை தலைகீழாக தொங்கவிட்டு கீழே இழுத்தபோது எதிர்பாராவிதமாக கயிறு அறுந்து சிவகார்த்திகேயன் தலைகீழாக கீழே விழுந்துவிட்டாராம். நல்ல வேளையாக அவரது தலையை கீழே உள்ள டான்சர்கள் பிடித்துக்கொண்டதால் அவரது முதுகில் மட்டும் அடிபட்டதாம்.

அன்றைய நாள் படப்பிடிப்பை ரத்து செய்துவிடலாம் என்று படக்குழுவினர் கூற, ஆனால் சிவகார்த்திகேயனோ “இல்லை, நான் இந்த ஷாட்டில் மீண்டும் நடிக்கிறேன்” என்று கூறி மீண்டும் தலைகீழாக தொங்கி அந்த ஷாட்டை நிறைவு செய்தாராம். ஒரு பாடல் காட்சிக்காக இவ்வாறு தனது உயிரையே பணயம் வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

Arun

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

27 நிமிடங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

50 நிமிடங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

1 மணி நேரம் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

2 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

2 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

2 மணி நேரங்கள் ago