“தல இங்க சேப்பாக்கத்தில் நடந்தால்.. ஈசிஆர் அதிரும்”… தோனியிடம் சிவகார்த்திகேயன் கேட்ட அந்த கேள்வி… நெகிழ்ந்த ரசிகர்கள்….!

Spread the love

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரீயூனியன் விழாவில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன் சிஎஸ்கே மற்றும் தோனி குறித்து உணர்ச்சிகரமாகப் பேசியுள்ளார். ஏ.ஆர். ரஹ்மானின் இசைக்கச்சேரி மற்றும் ஜாம்பவான் வீரர்களின் வருகையோடு களைகட்டிய இந்த விழாவில், தோனியை நேரில் பார்த்தது ஒரு ரசிகனாகத் தனக்கு மிகுந்த பதற்றத்தைத் தருவதாக சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

சிஎஸ்கே என்பது வெறும் கிரிக்கெட் அணி மட்டுமல்ல, அது ஒரு எமோஷன் என்று குறிப்பிட்ட சிவகார்த்திகேயன், தோனி சேப்பாக்கத்தில் களமிறங்கினால் அதன் அதிர்வு 25 கி.மீ தள்ளி இருக்கும் ஈசிஆர் வரை எதிரொலிக்கும் என்று புகழாரம் சூட்டினார். “வெற்றி தோல்விகளைக் கடந்து ரசிகர்கள் எப்போதும் சிஎஸ்கேவுடன் இருப்போம்; இந்த காட்டிற்கு ராஜாவாக இருக்கும் முஃபாசா (தோனி) மீது நாங்கள் வைத்திருக்கும் அதே நம்பிக்கையை, இப்போது சிம்பாவாக இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட் மீதும் வைத்துள்ளோம்” என்று அவர் உற்சாகமாகப் பேசினார்.

இந்த நிகழ்வில் சிஎஸ்கே அணியின் எதிர்காலம் மற்றும் வீரர்களின் சேர்க்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது. சஞ்சு சாம்சன் போன்ற திறமையான வீரர்கள் அணியில் இணைந்திருப்பது பலம் சேர்ப்பதாகக் குறிப்பிட்ட சிவகார்த்திகேயன், ருதுராஜுக்கு தோனியின் வழிகாட்டலும் ரசிகர்களின் பேராதரவும் பக்கபலமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், சென்னை அணிக்கு 6-வது கோப்பையைப் பெற்றுத் தருவதே ரசிகர்களின் தற்போதைய எதிர்பார்ப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நிகழ்ச்சியின் இறுதியில், தோனியிடம் அவரது ஓய்வு குறித்துக் கேட்கப்பட்டபோது, “நிச்சயமாக இல்லை” (Definitely Not) என்ற பதிலை மீண்டும் கேட்கவே ரசிகர்கள் விரும்புவதாக சிவகார்த்திகேயன் தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த தோனி, “வயது மற்றும் உடல் தகுதியைப் பராமரிப்பது கடினமாக இருந்தாலும், தொடர்ந்து முயற்சிக்கிறேன்” எனக் கூறிவிட்டு, மற்ற அணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் “OG is Back” என்று அதிரடியாக முடித்தார்.

Nanthini

Recent Posts

இது நடந்தால் சினிமாவிலிருந்து விலகுவேன்… நடிகர் சுந்தர்.சி திட்டவட்டம்… திரையுலகில் பரபரப்பு…!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகத் திகழும் அஜித்குமார், தற்போது சினிமாவில் இருந்து சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு கார் பந்தயங்களில் தீவிர…

3 minutes ago

“நீதி வழங்கியவருக்கே இந்த நிலையா?… 2 மாதங்களாக நடந்த ‘சைலண்ட்’ டார்ச்சர்… பாத்ரூமில் முடிந்த உச்சகட்ட விபரீதம்.. நள்ளிரவில் கதறிய தந்தை… !!!மருமகளின் “சைக்கோ” ஆட்டம் அம்பலம்”…!!!

டெல்லி நீதிமன்ற இளம் நீதிபதி அமன் குமார் ஷர்மாவின் தற்கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு…

12 minutes ago

“நடிகர் அஜித் அரசியலுக்கு வர வேண்டும்” என்ன காரணம் தெரியுமா.? ஓபனாக பேசிய சுந்தர்சி..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாகத் திகழும் அஜித்குமார், தற்போது திரையுலகிலிருந்து தற்காலிக இடைவெளி எடுத்துக்கொண்டு கார் பந்தயங்களில் (Car Racing)…

15 minutes ago

“ஒடிசாவில் பயங்கரம்!… ஆசை ஆசையாய் சாப்பிட்ட தாஹிபரா.. 27 குழந்தைகள் உட்பட 58 பேர் உயிருக்குப் போராட்டம்… உணவுக் கட்டுப்பாட்டு வாரியம் தீவிர விசாரணை”….!!!

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள படாபூர் கிராமத்தில், 'தாஹிபரா' எனப்படும் உள்ளூர் உணவைச் சாப்பிட்ட 27 குழந்தைகள் உட்பட…

26 minutes ago

“பகீர்!… வாயைத் திறந்து லாரியை விழுங்கிய பூமி… மணாலி-லே நெடுஞ்சாலையில் நடந்த திகில் சம்பவம்… வைரலாகும் திக் திக் வீடியோ”…!!!

வளைந்து நெளிந்து செல்லும் மலைப் பாதைகளில் பயணம் செய்வது மனதிற்கு இதமளித்தாலும், இயற்கை எப்போது வேண்டுமானாலும் தன் கோர முகத்தைக்…

39 minutes ago