இந்தத் தேர்தல் ரொம்ப ஸ்பெஷல்.. ஏன் தெரியுமா..? ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் விடுத்த அதிரடி வேண்டுகோள்…!!

By Soundarya on சித்திரை 23, 2026

Spread the love

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது வாக்கினைப் பதிவு செய்தார். வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தத் தேர்தல் மிகவும் உற்சாகம் மிகுந்ததாக இருப்பதாகக் குறிப்பிட்டார். இன்றைய நாளை விடுமுறை நாளாகவோ அல்லது ஓய்வு நாளாகவோ கருதாமல், நாட்டின் மிக முக்கிய நாளாகக் கருதி பொதுமக்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை உறுதியாக நிறைவேற்ற வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், சமூகத்தில் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இன்றி அனைவரும் சமம் என்பதை நமது ஒவ்வொருவருடைய வாக்கும் உணர்த்துவதாக சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தனது ரசிகர்களுக்குத் தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுத்த அவர், தவறாமல் அனைவரும் வந்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எளிமையான முறையில் வந்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்றிய சிவகார்த்திகேயனின் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.