![a2 (2) (2) - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2023/11/a2-2-2.jpg)
CINEMA
நெருங்கிய உறவினர் திருமண விழாவில் பங்கேற்காத சிவகார்த்திகேயன்.. வெளிய தலைகாட்டவே பயப்படுகிறாரோ..?
நடிகர் சிவகார்த்திகேயன், குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்தை அடைந்த இளம் நடிகர். விஜய் டிவியில் காம்பியராக தனது பயணத்தை துவங்கிய அவர், இன்று தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும்படியான ஒரு முக்கிய இடத்தில், முன்னணி நட்சத்திரமாக இருந்து வருகிறார். அவரை பொருத்த வரை, ரசிகர்கள் அவரை ஒரு நடிகராக பார்க்காமல் எதிர்வீட்டு, பக்கத்து வீட்டு பையனை போல மிக சிநேகமாக பார்த்தார்கள். இளம்பெண்கள் அண்ணா என்கின்றனர். அவரது வயது ஒத்த இளைஞர்கள், ப்ரோ அல்லது பாஸ் என செல்லமாக அழைக்கின்றனர்.
இப்படி தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சிவகார்த்திகேயன் மீது, இமான் வைத்த ஒரு குற்றச்சாட்டு, தமிழ் சினிமாவில் அனலாக கொதிக்கிறது. வெளியே சொல்ல முடியாத ஒரு நம்பிக்கை துரோகத்தை சிவகார்த்திகேயன் எனக்கு செய்துவிட்டார் என்ற அவரது பேச்சு, இன்றுவரை வைரலாகிக்கொண்டே இருக்கிறது. ஆனால், அதற்கு மறுப்போ விளக்கமோ தெரிவிக்காமல் மவுனமாய் இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன். இது மேலும் அவர் மீதான விமர்சனங்களுக்கு வழிவகுத்து, அவரது இமேஜை டேமேஜ் செய்து வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த சிவகார்த்திகேயனின் சித்தப்பாவின் 60வது திருமண விழாவில், சிவகார்த்திகேயன், அவரது மனைவி ஆர்த்தி, பிள்ளைகள், அம்மா உள்ளிட்ட யாருமே பங்கேற்கவில்லை. அதே போல், சிவகார்த்திகேயன் அலுவலகத்தில் நடந்த ஆயுதபூஜை விழாவிலும் சிவகார்த்திகேயன் மட்டுமே பங்கேற்றார். மேலும், சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான நடிகர் யோகிபாபு மகள் பிறந்த நாள் விழாவிலும் சிவகார்த்திகேயன் பங்கேற்கவில்லை.
இப்படி உறவினர். நண்பர்கள் என எந்தவிதமான பொது நிகழ்விலும் பங்கேற்காமல் தவிர்த்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படி அச்சப்பட்டு ஒதுங்கி இருந்தால், இந்த பிரச்னை தீராது. விரைவில் அவர் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே, அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.