காஷ்மீரில் நடக்கும் சிவகார்த்திகேயன்-சாய் பல்லவி ஷூட்டிங்.. கடுப்பில் இருக்கும் கமல்ஹாசன்.. என்னவா இருக்கும்..?

By admin on கார்த்திகை 1, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் உருவான அயலான் படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏலியனை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அயலான் திரைப்படம் பொங்கல் அன்று திரைக்கு வருவதாக கூறப்படுகிறது.

   

ஏற்கனவே சிவகார்த்திகேயன் பற்றி பல விமர்சனங்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. அதிலும் இமானுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இருக்கும் பிரச்சினை காரணமாக சிவகார்த்திகேயன் மீது இருந்த மரியாதை ரசிகர்களுக்கு குறைந்ததாகவே தெரிகிறது. இவ்வளவு பிரச்சனை நடந்தும் சிவகார்த்திகேயன் எந்த பதிலும் அளிக்காமல் மௌனம் சாதிக்கிறார்.

   

 

இது ஒரு புறம் இருக்க ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இந்த படத்திற்கு SK 21 எனது தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரி கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடந்து வருகிறது. எதிர்பார்த்ததை விட படத்தின் சூட்டிங்கிற்கு அதிக பட்ஜெட் ஆகிவிட்டதாக தெரிகிறது.

இதனால் ராஜ்கமல் ஃபிலிம் நிறுவனத்தினர் செலவுகளை குறைத்துக் கொள்ளுமாறு பட குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளனர். நினைத்ததை விட பட்ஜெட் அதிகமாக போய்க்கொண்டிருப்பதால் கமல்ஹாசன் கடுப்பில் இருப்பதாக செய்திகள் வலம் வருகிறது.