Connect with us

‘இவன் டைரக்டரா இல்ல பொறுக்கியா?’.. KS ரவிக்குமாரின் செயலைப் பார்த்து ஷாக் ஆன சிவாஜி கணேசன்- அப்படி என்ன செய்தார்?

CINEMA

‘இவன் டைரக்டரா இல்ல பொறுக்கியா?’.. KS ரவிக்குமாரின் செயலைப் பார்த்து ஷாக் ஆன சிவாஜி கணேசன்- அப்படி என்ன செய்தார்?

கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படம் படையப்பா. இந்த படம் கடந்த 1999-ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தன்று ரிலீஸ் ஆனது. ரஜினி சினிமா வாழ்க்கையின் உச்சபட்ச வெற்றியாக அமைந்த படங்களுள் ஒன்று படையப்பா.

இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்துள்ளார்.மேலும் ரம்யா கிருஷ்ணன், லட்சுமி, அப்பாஸ், நாசர், மணிவண்ணன், ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர் ரகுமான் இசை படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காக அமைந்தது. படையப்பா படத்தில் இடம் பெற்ற மின்சார பூவே, என் பேரு படையப்பா, சுத்தி சுத்தி வந்தீங்க, வெற்றி கொடி கட்டு ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது.

ரஜினியின் தந்தையாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு முதல் பாதியில் சிவாஜி கணேசனின் எமோஷனலான நடிப்பும் ஒரு காரணம். சிவாஜி கணேசன் தன்னுடைய கடைசி காலத்தில் நடித்த படங்களில் ஒன்று படையப்பா. இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான தகவலை இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

   

அதில் “ஷூட்டிங்கின் போது ஒரு காட்சியில் நான் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேண்டாம் என சொல்லிவிட்டேன். ஆனால் உள்ளூர் ஆட்களை எல்லாம் ஐயர் வேஷத்தில் அழைத்து வந்துவிட்டார்கள். நான் அவர்களை எல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு உதைத்து அனுப்பிவிட்டேன். இதைப் பார்த்த சிவாஜி சார் ரஜினி சாரிடம் போய் “இவன் என்ன டைரக்டா? இல்ல பொறுக்கியா? ஐயரெல்லாம் அடிக்கிறான்” எனக் கேட்டுள்ளார்.

 

அதற்கு ரஜினி சார் “இல்ல சார் அவங்க எல்லாம் ஐயர் இல்ல. லோக்கல் ஆளுங்கதான்” எனக் கூறி சமாதானப் படுத்தினாராம்.

Continue Reading
To Top