Connect with us

கோலாகலமாக கடையை திறந்துட்டு, மறுநாளே வேலையை காட்டிய மனோஜ்.. ஷாக்ங்கில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்..!

CINEMA

கோலாகலமாக கடையை திறந்துட்டு, மறுநாளே வேலையை காட்டிய மனோஜ்.. ஷாக்ங்கில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்..!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது கோலாகலமாக மனோஜ் கடையை திறக்கின்றார். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. விஜய் டிவியில் தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது.

அதிலும் முத்து மற்றும் மீனாவின் காம்போக்காகவே இந்த சீரியலை பலரும் பார்த்து வருகிறார்கள். தற்போது இந்த சீரியலில் மனோஜ் ஒரு பெரிய கடையை திறக்கின்றார். அந்த கடையின் திறப்பு விழா தொடர்பான கதை நகர்ந்து வருகின்றது .திறப்பு விழாவிற்கு விஜயா ஸ்பெஷலாக சுருதி-இன் அம்மாவை அழைக்க மீனாவின் குடும்பத்திலிருந்து யாரையும் அழைக்கவில்லை.

   

இதனால் கோபமான அண்ணாமலை விஜயாவிடம் ஏன் மீனா குடும்பத்திலிருந்து யாரையும் அழைக்கவில்லை என்று கூற, அவர்கள் வந்தா மட்டும் என்ன செய்யப் போறாங்க.. பொறாமை தான் படப் போறாங்க என்று கூறுகிறார். பின்னர் ஸ்ருதியின் அம்மா ஏசி வாங்க மீனா மிக்ஸி வாங்குகின்றார். இதை பார்த்த விஜயா மிகவும் மோசமாக பேசுகிறார். இதையடுத்து பாட்டி விஜயாவை கூப்பிட்டு திட்டுகிறார்.

 

அதோடு முதல் நாளை நல்ல வியாபாரம் என்று குடும்பத்தில் இருக்கும் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து முதல் நாள் கோலாகலமாக கடையைத் திறந்த மனோஜ் அடுத்த நாளே தனது வேலையை காட்டுகின்றார். எப்போதும் சோம்பேறித்தனமாக இருக்கும் மனோஜ் மறுநாள் காலையில் இழுத்து போத்தி கொண்டு தூங்குகிறார்.

இதை பார்த்த பலரும் அவனுக்கு இன்னும் பொறுப்பு வரவில்லை என்று அண்ணாமலை திட்ட விஜயா அவரை எழுப்புவதற்கு முயற்சி செய்கிறார். ஆனால் புரண்டு புரண்டு தூங்கிக் கொண்டிருக்கின்றார் மனோஜ். இது தொடர்பான ப்ரோமோ வெளியானதை பார்த்து ரசிகர்கள் இவர் திருந்தவே மாட்டார் என்று கூறி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் அண்ணாமலை பணத்தை வைத்துக்கொண்டு ரோகிணி அவரது அப்பா கொடுத்த பணம் என்று ஏமாற்றி வருகிறார். இது எப்படியாவது தெரிந்துவிட வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top