விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் தற்போது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. கோயிலில் யாருக்கும் தெரியாமல் திருட்டு திருமணம் செய்து கொண்டனர் ரவி ஸ்ருதி. சாட்சி கையெழுத்து போட்டு வந்து மாட்டிக் கொண்டார் மீனா. இதைத்தொடர்ந்து அண்ணாமலையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தற்பொழுது ஒட்டுமொத்த குடும்பமும் ஜெயிலில் உள்ளனர்.
இந்நிலையில் கோவிலுக்கு சென்ற போலீஸ் ஒருவர் உண்மையை அறிந்து வந்து அங்கு கூறுகிறார். அங்கிருந்த உயர் அதிகாரி ‘ இங்க யாரு மீனா?’ என்று கேட்க ‘என் பொண்டாட்டி தான் சார்’ என்று முத்து சொல்கிறார். அவங்க தான் சாட்சி கையெழுத்தை போட்டு இருக்காங்க. என்று போலீஸ்காரர் கூற ‘அப்படியெல்லாம் செய்ய மாட்டா சார்’ என்று முத்து கூறுகிறார். இதைத்தொடர்ந்து விஜயா ‘மீனாவிடம் என் குலத்தை அழிக்க வந்தவடி நீ .உன் புத்திய காமிச்சிட்டியா.’ என திட்டுகிறார்.
அண்ணாமலையிடம் சென்று ‘எப்படி பண்ணி வச்சிருக்கா பாருங்க.இவதான் நம்மப்புள்ளைக்கு கல்யாணம் பண்ணி வைச்சிருக்க. நம்ம குடும்ப மானத்தையே வாங்கிட்டா. இப்ப நம்ம எல்லாரையும் கொண்டு வந்து எங்கு நிறுத்தி இருக்கான்னு பாத்தீங்களா ‘ என ஆவேசமாக கத்துகிறார். இதை தொடர்ந்து முத்து மீனாவிடம் கோபமாக ‘நீ சாட்சி கையெழுத்து போட்டையா?’ என்று கேட்க மீனா கையெழுத்து போட்டதாக ஒப்புக்கொள்கிறார். கோபமான முத்து மீனாவின் கன்னத்தில் ஓங்கி அறைகிறார்.
இதைத் தொடர்ந்து ரோகினி ‘ இது எல்லாத்துக்குமே நீங்கதான் காரணமா? செய்வதெல்லாம் செஞ்சிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி நிக்கிறீங்க’ என்று சந்துல சிந்து பாடுகிறார். முத்து மீனாவிடம் ‘ உன்ன பாத்துக்கோன்னு சொல்லி விட்டுட்டு போனா என்ன பண்ணி வச்சிருக்க. உனக்கு இவ்ளோ தைரியம் எங்க இருந்து வந்துச்சுன்னு’ கோபமாக திட்டுகிறார். இப்படி பரபரப்பாக இன்றைய நாளின் பிரமோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர் நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் மீனா. பாண்டியன் ஸ்டோர்…
ராஜ்கிரனின் வளர்ப்பு மகளான பிரியா நடிகரான முனீஸ் ராஜாவை திருமணம் செய்து கொண்டார். ஒரு வருடம் கூட சேர்ந்து வாழாத…
தமிழ் சினிமாவில் பல படங்களைத் தயாரித்தவர் செவந்த் சேனல் கம்யுனிகேஷன் நிறுவனத்தின் உரிமையாளர் மாணிக்கம் நாராயணன். ஆனால் இவர் தயாரித்த…
தமிழ் சினிமாவில் சோசியல் மீடியா மூலமாக பிரபலமான நபர்களில் விஜே பார்வதியும் ஒருவர். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை…
90ஸ் காலகட்டத்தில் மிகவும் கொடூரமான வில்லனாக வளம் வந்தவர் நடிகர் பொன்னம்பலம். மக்கள் மத்தியில் கபாலி என்ற பெயருடன் அழைக்கப்பட்ட…
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல குரல்களில் பாடி மக்கள் மனதில் இடம் பிடித்த ஹர்ஷினி நேத்ரா பத்தாம் வகுப்பில் சரியாக…