#image_title
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் மற்றும் காதல் உருவானது குறித்தான ஆவண படத்தை நெட்பிலிக்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. இந்த ஆவணப்படம் சில தனிப்பட்ட காரணங்களால் தள்ளிப் போனது. அதாவது நானும் ரவுடிதான் திரைப்படத்தின் இயக்குனராக விக்னேஷ் சிவன் இருந்த நிலையில் நயன்தாரா படத்தில் ஹீரோயினியாக நடித்திருந்தார். அந்த திரைப்படத்திற்கு பிறகு தான் இருவருக்கும் காதல் மலர்ந்து பிறகு திருமணம் செய்து கொண்டனர்.
#image_title
அதிலிருந்து சில காட்சிகளை இந்த ஆவணப்படத்தில் வைக்க திட்டமிட்டிருந்த நிலையில் அப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் தனக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விவகாரம் கடந்த இரண்டு வருடங்களாக நீடித்தது. இப்படியான நிலையில் நயன்தாரா பகிரங்கமாக தனுஷை நேரடியாக தாக்கி மூன்று பக்க லெட்டர் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
#image_title
அதில் தனுசுக்கு நேரடியாக பல கேள்விகளை நயன்தாரா எழுப்பி இருந்த நிலையில் இதனை தொடர்ந்து நயன்தாராவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றன. குறிப்பாக தனுசுடன் பல திரைப்படங்களில் ஜோடியாக நடித்த நடிகைகள் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
#image_title
இப்படியான நிலையில் பாடகி சுசித்ரா தனுஷ் மற்றும் நயன்தாரா விவகாரம் குறித்து பேசி உள்ளார். அதாவது, யாருக்கெல்லாம் தனுஷ் சான்ஸ் குடுத்திருக்காரோ அவர்களையெல்லாம் தனுஷ் ஏமாத்தியிருக்கார். சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன், நயன்தாரா எல்ல்லோரையுமே ஏமாத்திருக்காருன்னு தான் சொல்றாங்க. ஆரம்ப கட்டத்துல அவங்களுக்கெல்லாம் வாய்ப்பு குடுத்தது கண் துடைப்பு தான் என்று பேசியுள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…