மாயா அந்த மாதிரி பொண்ணு… என்னோட கணவர் கூட அவளுக்கு Help பண்ணி இருக்காரு.. அதிர்ச்சியை ஏற்படுத்திய பிரபல பாடகி..

By Begam

Updated on:

விஜய் தொலைக்காட்சியில் பெரும் ஆரவாரத்துடன் துவங்கிய தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.  துவங்கியது முதலே மாயா  ரசிகர்களின் வெறுப்பை அதிகம் சம்பாதித்து வருகிறார். அவரின் உண்மைமுகம் தற்பொழுது வெளிப்பட்டு வருகிறது. தற்பொழுது  5 வைல்ட் கார்டு போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.

   

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களில் அனன்யா, பாவா செல்லத்துரை, விஜய் வர்மா, வினுஷா, யுகேந்திரன், பிரதீப் , அன்னபாரதி என 7 போட்டியாளர்கள் இதுவரை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர். இவர்களில் கடந்த சனிக்கிழமை போட்டியாளர் பிரதீப் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தால் ‘பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ என கூறி ரெட் கார்டு கொடுத்து கமலஹாசனால் வெளியேற்றப்பட்டார். இதற்கு தற்பொழுது வரை  பிரபலங்களும், ரசிகர்களும்  தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த ரெட் கார்டு சூழ்ச்சிக்கு முக்கிய காரணம் மாயா தான். அவரும் அவருடைய gang ஒன்றாக சேர்ந்து பிளான் போட்டு பிரதீப்பை வெளியேற்றி உள்ளனர். தற்பொழுது பிரதீப்பை தொடர்ந்து ஆர் ஜே பிராவோ மீது தவறான குற்றச்சாட்டை முன்வைத்து அடுத்த ஸ்கெட்ச் போட்டு வருகின்றனர் இந்த  மாயா, பூர்ணிமா ஐஷு. இந்நிலையில் பிரபல பாடகி சுசித்ரா பிக் பாஸ் போட்டியாளரானா மாயா மீது பரபரப்பு குற்றச்சாட்டை  முன்வைத்துள்ளார்.

அதில் அவர் கூறும்பொழுது ‘இயக்குனர் கவுதம் மேனனின் உதவி இயக்குனருடன் பழக்கம் இருந்தது.  மாயா ஒரு லெஸ்பியன். இந்த விஷயம் பிரதீப்புக்கும் தெரியும். என்னுடைய முன்னாள் கணவர் கூட மாயாவுக்கு பல உதவிகள் செய்துள்ளார். மாயா ரொம்ப மோசமானவர்’ என்று  கூறியுள்ளார். ஆமாங்க நம்ம மாயா 2015 ல் பாலியல் கேசில் சிக்கியவர் என்பதும் பலரும் அறிந்திடாத ஒன்று. அதாவது இவர் நடிகை அனன்யா ராம் பிரசாத் என்பவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.இதனால் அவர் போலீசில் சென்று புகாரும் அளித்துள்ளார். ஆனால் இது உண்மையில்லை என மாயா கூறியதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இந்த தகவல் இணையத்தில் காட்டுத் தீயாய் பரவி வருகிறது.