BREAKING: “சிங்கப்பெண் அதிரடிப்படை” திட்டத்தின் தொடக்க விழா ரத்து…!!

By Soundarya on வைகாசி 28, 2026

Spread the love

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடிப்படையின் தொடக்க விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் மே 29-ஆம் தேதி (நாளை) தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வந்தன.

ஆனால், ஏற்கனவே மே 27-ஆம் தேதி தொடங்கப்படவிருந்து ஒத்திவைக்கப்பட்ட இந்த விழா, தற்போது மீண்டும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகள் மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்து வந்த சூழலில், இந்தத் திட்டம் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.