![sur - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2024/06/sur.jpg)
CINEMA
சூர்யா தான் என்கிட்ட அதை சொன்னாரு.. அவருக்கு என்மேல ரொம்ப பாசம்.. கண்கலங்கி பேசிய நடிகர் சிங்கம் புலி..!!
பிரபல நடிகரான சிங்கம் புலி மாயாண்டி குடும்பத்தார், மனம் கொத்தி பறவை, தேசிங்குராஜா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படங்களில் இவரது எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை சிரிக்க வைக்கும் விதமாக இருக்கும். அஜித் குமார் நடித்த ரெட் திரைப்படத்தையும், சூர்யா நடித்த மாயாவி திரைப்படத்தையும் சிங்கம் புலி தான் இயக்கியுள்ளார்.
அஜித்குமார் பிரியா கில்லு நடிப்பில் கடந்த 2002-ஆம் ஆண்டு ரெட் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை சிங்கம் புலி தான் இயக்கினார். இந்த படத்திற்கு தேவா இசை அமைத்துள்ளார். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது. பிரபல நடிகரான சூர்யா சசி சங்கர் இயக்கத்தில் உருவான பேரழகன் படத்தில் நடித்தார். கடந்த 2004-ஆம் ஆண்டு இந்த படம் ரிலீஸ் ஆனது. சூர்யா இரட்டை வருடங்களில் நடித்த இந்த படத்திற்கு சிங்கம் புலி தான் வசனம் எழுதினார்.
அந்த வசனங்கள் சூர்யாவை மிகவும் ஈர்த்துள்ளது. சமீபத்தில் சிங்கம்புலி அளித்த பேட்டியில் கூறியதாவது, நான் எனக்கு சூர்யா சாரை தெரியும். நான் அவரிடம் சென்று மாயாவி படத்தின் கதையை சொல்லி நீங்கள் நடிக்கிறீர்களா என கேட்கவில்லை. சூர்யாவுக்கு என் மேல் அதீத பாசம். அவர் தான் என்னிடம் வந்து நம்ம ஒரு படம் பண்ணலாம். பாலா சார் ஒரு படத்தை தயாரிக்கப் போறாரு. அவர் தயாரிக்கும் முதல் படத்தில் நான் தான் ஹீரோ.
நீங்கதான் அந்தப் படத்தை இயக்கனும். கதை ரெடி பண்ணுங்க என என்னை அழைத்து வாய்ப்பு கொடுத்தார். சூர்யா என் மேல அவ்வளவு அன்பு வச்சிருக்காரு என சிங்கம்புலி கண் கலங்கி பேசினார். சூர்யா நினைத்தபடி சிங்கம் புலி இயக்கத்தில் மாயாவி திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் 2005 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்துள்ளார். இந்த படம் அதிக வரவேற்பு பெறவில்லை என்றாலும் இன்றளவும் ரசிகர்களின் விருப்ப பட்டியலில் இருக்கிறது.
View this post on Instagram