Connect with us

சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக தனுஷும், சிம்புவும் அதை செய்றாங்க… இதெல்லாம் ரொம்ப அநியாயம்… சினிமா பிரபலம் புலம்பல்!

CINEMA

சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக தனுஷும், சிம்புவும் அதை செய்றாங்க… இதெல்லாம் ரொம்ப அநியாயம்… சினிமா பிரபலம் புலம்பல்!

 

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி தமிழ் சினிமாவில் அபரிமிதமானது. சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் மற்றும் விஜய் போன்ற சில சூப்பர் ஸ்டார்களே பெற்றது போன்ற குறுகிய கால வளர்ச்சியை அவர் தன்னுடைய கேரியரில் கொடுத்தார். இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கிறார்.

அவர் அடுத்தடுத்து கமர்சியல் ரீதியாக வெற்றி கொடுத்ததால் அவரின் சம்பளமும் சரசரவென்று உயர்ந்தது. அவரின் சீனியர் நடிகர்களான சிம்பு, தனுஷ், ஆர்யா, கார்த்தி மற்றும் ஜெயம் ரவி ஆகியோரை விட அவரின் சம்பளம் அதிகமானது. அவர் படங்கள் கமர்ஷியல் ஹிட் ஆவதால் தயாரிப்பாளர்களும் கொடுக்க தயாராக இருந்தனர்.

   

இதனால் அவரின் சம்பளம் இப்போது 30 கோடி ரூபாய் அளவுக்கு ஏறியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அவரை பார்த்து சிம்புவும் தனுஷும் தங்களுடைய சம்பளத்தை ஏற்றி இருக்கிறார்களாம். இதை திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமண்யன் தெரிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக பேசியுள்ள அவர், “சிவகார்த்திகேயன் சம்பளத்தை ஏற்றியதால் இவர்கள் நானும் அவருக்கு இணையாக ஹிட் படத்தைக் கொடுத்துக் காட்டுகிறேன் பார் என்று சவால் விடுவதில்லை. ஆனால் அவர் சம்பளம் ஏற்றியதைப் பார்த்து இவர்களும் சம்பளத்தை ஏற்றுகிறார்கள். மாநாடு படத்துக்கு சிம்புவுக்கு சம்பளம் 10 கோடிதான். ஆனால் அவர் அடுத்த படத்தில் 35 கோடி ரூபாய் சம்பளமாக கேட்கிறார். தனுஷும் இதே போலதான் அதிரடியாக பல மடங்கு சம்பளத்தை ஏற்றிவிட்டார்” எனக் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் தற்போது “அமரன்” என்ற படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். இதன்பின்னர் அவர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அதே போல சிம்பு தற்போது தக்லைஃப் மற்றும் தேசிங் பெரியசாமி படத்தில் நடிக்க உள்ளார். தனுஷ், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நான்குக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Continue Reading
To Top