![silk - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2024/06/silk.jpg)
CINEMA
தன்னை வளர்த்து விட்ட இயக்குனரிடம் பேரம் பேசிய சில்க்.. ஹிந்தி நடிகையை போட்டியாக களமிறங்கிய பாலு மகேந்திரா..!!
பாலு மகேந்திரா இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த திரைப்படம் மூன்றாம் பிறை. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்துள்ளார். ஸ்ரீதேவிக்கு தன்னை நினைவு படுத்த கமல்ஹாசன் எடுக்கும் முயற்சிகள் படம் பார்ப்பவரை கண் கலங்க வைக்கும். இளையராஜாவின் இசை அருமையாக இருக்கும்.
இந்த படத்திற்காக கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகர் விருதும், பாலு மகேந்திராவுக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருதும் வழங்கப்பட்டது. கமலஹாசனும், ஸ்ரீதேவியும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு நடித்தனர். இந்த படத்தில் இடம்பெற்ற கண்ணே கலைமானே என்ற பாடலை யாராலும் மறக்க முடியாது. மூன்றாம் பிறை திரைப்படத்தின் வெற்றிக்கு சில்க் ஸ்மிதாவும் ஒரு காரணம்.
இந்த படம் ஹிந்தியில் சத்மா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. ஹிந்தி ரீமேக் வெர்ஷனிலும் பாலு மகேந்திரா சில்க்ஸ்மிதாவை நடிக்க வைக்க நினைத்தார். ஆனால் ஹிந்தி படத்தில் நடிக்க சில்க் ஸ்மிதா ஒரு பெரிய தொகையை சம்பளமாக கேட்டுள்ளார். அவ்வளவு தொகையை கொடுக்க வேண்டாம் என்று நினைத்து வேறு ஹீரோயினை வைத்து பாலு மகேந்திரா அந்த பாடல் காட்சியை எடுத்துள்ளார்.
ஆனால் சில்க் ஸ்மிதா பாடல் காட்சிகள் சூப்பர் ஹிட்டான அளவு ஹிந்தி நடிகை நடித்த பாடல் நன்றாக இல்லை. அதனை தயாரிப்பு நிறுவனமே சொன்னது. இதனால் பாலு மகேந்திரா மீண்டும் சில்க் ஸ்மிதாவிடம் பேசி அவர் கேட்ட சம்பளத்தை கொடுத்து சில்க் ஸ்மிதாவை வைத்து மீண்டும் அந்த பாடல் காட்சியை எடுத்துள்ளார். இந்த தகவலை சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.