ஹாப்பூர் பகுதியில் அரங்கேறியுள்ள இந்த கொடூரச் சம்பவம், மனிதநேயத்தை முற்றிலும் சாகடித்துள்ளதோடு ஒட்டுமொத்த சமூகத்தையும் தலைகுனிய வைத்துள்ளது. வெறும் 7 வயதே ஆன ஒரு சிறுவன், அவனுக்கு ‘திருட்டு’ என்றால் என்னவென்றே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட அந்தச் சிறுவன் மீது திருட்டுப் பட்டம் சுமத்திய கடைக்காரர், அவனுக்குத் தண்டனை வழங்குவதாகக் கூறி, எவ்வித இரக்கமுமின்றி குளிர்ந்த ‘டீப் ப்ரீசருக்குள்’ (Deep Freezer) வைத்துப் பூட்டியுள்ளார். அந்த பிஞ்சு குழந்தையை மரணத்தின் விளிம்பிற்குத் தள்ளிய இந்தச் செயல் காண்போரை அதிர வைத்துள்ளது.
உறைபனி நிலைக்குச் செல்லும் அந்தப் பெட்டிக்குள் சிக்கித் தவித்த அந்தச் சிறுவன், உடல் ரீதியான வேதனையைத் தாண்டி மனரீதியாக எவ்வளவு பெரிய அதிர்ச்சியைச் சந்தித்திருப்பான் என்பதை நினைக்கும்போதே நெஞ்சு பதறுகிறது. ஒரு சிறிய சந்தேகத்திற்காக இவ்வளவு பெரிய கொடூரத்தை இழைக்க எப்படி மனம் வந்தது என்ற கேள்வியும், கடைக்காரரின் இத்தகைய மிருகத்தனமான செயலும் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுவனின் பிஞ்சு மனதில் ஏற்பட்ட இந்த வடு, அவன் வாழ்நாள் முழுதும் மறக்க முடியாத கசப்பான நினைவாக மாறிவிட்டது.
एक मासूम के साथ कोई इतनी क्रूरता कैसे कर सकता है
मात्र 7 साल का बच्चा जिसे ठीक से चोरी का मतलब भी नहीं पता होगा उस पर चोरी का आरोप लगाकर दुकानदार ने सजा देने के नाम पर उसे ठंडे डी फ्रीजर में कैद कर दिया
एक नन्हे से बच्चे को चोरी के शक पर मौत के मुँह में धकेलने वाली यह… pic.twitter.com/YQEHQR13BP
— Aryan (@aryankumar86) March 31, 2026
இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் பரவியதும், சமூக வலைதளங்களில் அந்த கடைக்காரருக்கு எதிராகக் கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன. மனிதாபிமானமற்ற இந்தச் செயலைச் செய்த அந்த நபர் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஒரு குழந்தையைப் பாதுகாக்க வேண்டிய சமூகத்தில், இப்படிப்பட்ட அரக்கத்தனமான மனிதர்களால் இன்று மனிதநேயம் என்பது வெறும் சொல்லாகவே மாறிப் போனது வேதனைக்குரியது.
