ஓஹியோவில் உள்ள ஸ்கைவர்ட் அகாடமி என்ற சிறப்புப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றிய 33 வயதான ரியான் கன்னிங்ஹாம், அங்கு பயின்ற கற்றல் குறைபாடுள்ள மாணவி ஒருவருக்கு நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பியதை ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த 2021-ல் அந்த மாணவிக்கு 16 வயதாக இருந்தபோது இந்தத் துஷ்பிரயோகம் தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில் ஸ்னாப்சாட் மூலம் அடையாளம் தெரியாத நபர் போல பேசி பழகிய கன்னிங்ஹாம், பின்னர் அது தன்தான் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். பள்ளியில் வைத்து மாணவியின் தொடையைத் தொட்டது மற்றும் திரைக்குப் பின்னால் அழைத்துச் சென்று முத்தமிட்டது போன்ற அத்துமீறல்களிலும் அவர் ஈடுபட்டுள்ளார் என மாண்ட்கோமரி காவல் துறையின் அறிக்கை குற்றம் சாட்டுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு 18 வயதாகி அதே பள்ளியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்த போதும், இவர்கள் இருவரும் ஸ்னாப்சாட்டில் நிர்வாணப் புகைப்படங்களைப் பரிமாறிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட கடினமான சூழ்நிலையைப் பயன்படுத்தி, அந்த மாணவி தன்னைத் தொடர்ந்து தொந்தரவு செய்ததால் தான் இந்த முறையற்ற உறவில் ஈடுபட்டதாகக் கன்னிங்ஹாம் காவல்துறையிடம் சாக்குப்போக்கு கூறியுள்ளார். எனினும், பாதிக்கப்பட்ட மாணவியின் கூற்றுப்படி, அவர் அந்த ஆசிரியரிடமிருந்து சுமார் ஏழு முதல் எட்டு நிர்வாணப் புகைப்படங்களையும், மூன்று அல்லது நான்கு வீடியோக்களையும் பெற்றுள்ளார். 2023-ல் மாணவி பட்டம் பெற்றவுடன் இந்த உறவு முடிவுக்கு வந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஹாமில்டன் கவுண்டி நீதிமன்றத்தில் கன்னிங்ஹாம் மீது மூன்று பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டுகள் மற்றும் சிறார்களுக்கு எதிரான ஆபாசத்தைப் பரப்பியது உள்ளிட்ட கடுமையான பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காவல்துறையின் விசாரணைப் பேட்டியில், தான் புகைப்படங்களை அனுப்பியதை ஒப்புக்கொண்ட கன்னிங்ஹாம், பள்ளியில் வைத்து முத்தமிட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து மாண்ட்கோமெரி காவல்துறை பள்ளி நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, கன்னிங்ஹாம் முதலில் நிர்வாக விடுப்பில் வைக்கப்பட்டு, பின்னர் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…
விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி எதிர்பாராதவிதமாக வடிகால் வாய்க்காலில் நழுவி விழுந்து, மூழ்கும் அபாயத்திற்கு உள்ளானாள். நீச்சல் தெரியாததால் அவள்…
மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் வகையில் இனி மாதத்தில் ஒருநாள் 'No Bag Day'…
மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், எலும்பியல் மருத்துவரான யோகேந்திர ஜெய்ஸ்வால் மீது நோயாளியின் மகன்…
நியூயார்க்கின் புரூக்ளின் பகுதியில் பீட்சா விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 28 வயதான இந்திய இளைஞர் குர்தீப் சிங், ஈவு…
உன்னாவ் பகுதியில் இ-ரிக்ஷா ஒன்றை ஓரமாக நிறுத்துவது அல்லது அகற்றுவது தொடர்பாக, பணியில் இருந்த ஹோம் கார்டு காவலருக்கும் இ-ரிக்ஷா…