CINEMA
பிரபல பாடகியால் தனக்கு ரொம்ப பிடித்த குயில் கறி சாப்பிடுவதை நிறுத்திய சிவாஜி.. பின்ன, உடன்பிறவா சகோதரி ஆச்சே..
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். அவரது நடிப்பு பிடிக்காதவர்கள் யாருமே கிடையாது. சமீபத்தில் சித்ரா லட்சுமணன் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது சிவாஜி எவ்வளவு பெரிய அசைவ பிரியர் என்பது எல்லாருக்கும் தெரியும். அதிலும் அவர் குயில் கறியை விரும்பி சாப்பிடுவார்.
பின்னணிப் பாடகி அன்ன லதா மங்கேஷ்கருக்கும் சிவாஜிக்கும் இருந்த உறவு அனைவரும் அறிந்ததே. இருவரும் அண்ணன் தங்கைகளாக வலம் வந்தனர். சிவாஜி எப்போதெல்லாம் மும்பைக்கு சென்றாலும் லதா மங்கேஷ்கரின் வீட்டில் தான் தங்குவார். அதேபோல லதா மங்கேஷ்கர் சென்னைக்கு வந்தால் சிவாஜியை பார்க்காமல் செல்ல மாட்டார். அப்படி லதா மங்கேஷ்கர் ஒரு முறை சிவாஜியின் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது சிவாஜியின் வீட்டில் ஏராளமான குயில்களை கூண்டில் அடைத்து வைத்துள்ளனர். அதனை பார்த்ததும் இது எதற்கு என லதா கேட்டுள்ளார். உடனே சிரித்துக்கொண்டே சிவாஜி வேறு எதற்கு சாப்பிட தான் என கூறியுள்ளார். அதனை கேட்டதும் லதா மங்கேஷ்கரின் மனம் பதறி போனது. அதனை திறந்து விடுங்கள் என கூறி வருத்தப்பட்டுள்ளார்.
சுதந்திரமாக பறக்க ஆசைப்படும் பறவைகளை இப்படி அடைக்கலாமா திறந்து விடுங்கள் என கூறியுள்ளார். உடனே மறு பேச்சு பேசாமல் சிவாஜி அனைத்து குயில்களையும் திறந்துவிட்டார். அன்று குயில்களோடு இணைந்து லதா மங்கேஷ்கர் பாடியுள்ளார். அந்த நாளை சிவாஜியால் மறக்க முடியவில்லை. அன்றிலிருந்து குயில் கறி சாப்பிடுவதை நிறுத்திவிட்டார். குயில் கறி இனிமேல் சாப்பிட மாட்டேன் என சிவாஜி சபதம் எடுத்துக் கொண்டார் என சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.