#image_title
படையப்பா திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிகாந்த் இடம் நடிகர் சிவாஜி இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரை பார்த்து இவன் என்ன பொறுக்கியா என்று கேட்டிருக்கின்றார். இதனை சரத்குமார் ஒரு பேட்டியில் பேசியிருக்கின்றார்.
விக்ரமன் உள்ளிட்ட இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் தான் கே எஸ் ரவிக்குமார். அதன் பிறகு புது வசனம் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். முதல் திரைப்படம் அவருக்கு சுமாரான வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக புரியாத புதிர் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டானது.
குறிப்பாக ரகுவரன் பேசும் ஐ நோ வசனம் இன்றும் ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதைத் தொடர்ந்து அவர் இயக்கிய சேரன் பாண்டியன், நாட்டாமை, பொண்டாட்டி ராஜ்ஜியம், பெரிய குடும்பம், நட்புக்காக உள்ளிட்ட திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டு கொடுத்த நிலையில் மிகப்பெரிய இயக்குனராக வளம் வந்தார்.
பெரும்பாலான திரைப்படங்களில் சரத்குமாரை வைத்து இயக்கி வந்த கே எஸ் ரவிக்குமார் ரஜினியை வைத்து இயக்கிய திரைப்படம் தான் படையப்பா. அந்த திரைப்படத்தை தொடர்ந்து கமலஹாசனை வைத்து அவ்வை சண்முகி என்ற திரைப்படத்தையும் இயக்குகிறார். இந்த இரண்டு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் கமலஹாசன் ஆகியோரின் ஆஸ்தான இயக்குனராக மாறினார் கே எஸ் ரவிக்குமார்.
தொடர்ந்து தெனாலி, முத்து உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி வந்தார். ரஜினியின் திரை வாழ்க்கையில் மட்டும் இல்லாமல் கேஸ் ரவிக்குமாரின் திரை வாழ்க்கையிலும் முக்கிய திரைப்படமாக அமைந்தது தான் படையப்பா. அந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன் நடித்திருப்பார். மேலும் ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா உள்ளிட்ட பலர் படத்தில் நடித்திருப்பார்கள்.
இன்றுவரை இந்த திரைப்படத்தை டிவி சேனலில் ஒளிபரப்பானால் பலரும் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் அளவுக்கு மிக சிறப்பாக இருக்கும். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது முருகன் கோயிலிலிருந்து சிவாஜி கணேசன் இறங்கி வருவது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அது விடியகாலையில் எடுக்கப்பட்ட ஷார்ட். அப்போது கேஸ் ரவிக்குமார் படபிடிப்பு தளத்தில் எப்போதும் போல தனது அசிஸ்டன்ட் டைரக்டர்களையும் அங்கு பணிபுரிபவர்களையும் தாறுமாறாக திட்டிக் கொண்டிருந்தார்.
மேலும் அங்கு ஐயர் வேடம் போட்டு அமர்ந்தவர்களை காலால் எட்டி உதைபதை பார்த்து அதிர்ச்சி அடைந்து போனார் சிவாஜி கணேசன். பின்னர் ரஜினிகாந்த் இடம் சென்று இவர் டைரக்டரா இல்ல பொறுக்கியா என்று கேட்டாராம். இதனை நடிகர் சரத்குமார் ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கின்றார். அதனை கேஸ் ரவிக்குமாறும் ஒப்புக்கொண்டிருந்தார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…